Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு (page 2)

உங்கள் சிந்தனைக்கு

நவீனக் கொள்கைக் குழப்பங்களிலிருந்து எமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.. அன்பார்ந்த சகோதரர்களே..!அல்லாஹ்வால் இறுதித் தூதராக இந்த பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவத்தை சரிவர நிறைவேற்றி எம்மை நேரான வெண்மையான பாதையில் விட்டுச் சென்றார்கள். அதன் இரவு கூட பகலைப் போன்றதாகும் . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வபாத்திற்க்குப் பின்னர் நபித்தோழர்களின் காலத்திலேயே இஸ்லாத்தின் பெயரால் பல வழிகேடுகள் தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன. இது …

Read More »

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் (தொடர்-1)

ஒரு முஃமினுடைய வாழ்வில் இரவு நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற நேரமாகும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இந்த இரவு நேரத்தை பல அமற்களைக் கொண்டு அலங்கரித்துள்ளார்கள். எனவே இவ்வாக்கத்தில் நபிகளாரின் இரவு நேர அமற்களைப் பற்றிய சிறு தொகுப்பை உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன். நபிகளாரின் வாழ்நாளில் இஷா தொழுகையின் பின் சுன்னத்துக்குப் பிறகு அவர்கள் செய்துள்ள காரியம் என்ன என்று நாம் தேடினோம் எனில் இரவுத்தொழுகையை அவர்கள் …

Read More »

கஃபாவை அண்மித்த பகுதிகளை விட்டும் மக்கள் தடுக்கப்பட்டமை மறுமை நாளின் அடையாளமா..?

அண்மையில் சில தினங்களுக்கு முன் உம்ராவுக்காக மக்கள் வெளிநாடுகளில் இருந்து மக்காவுக்கு வருவதையும் கஃபாவை அண்மித்த பகுதிகளில் வணக்கங்களில் ஈடுபடுவதையும் பாதுகாப்பு மற்றும் சுகாதார வேலைகளுக்காக சவுதி அரசு தடை செய்ததை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் இது மறுமையின் அடையாளங்களில் ஒன்று என்ற ஒரு பதிவு வேகமாக பரவி வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் நெருங்கி வரும் மறுமையின் சிரிய பெரிய அடயாளங்களை …

Read More »

மாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 062]

மாணவரொருவருக்கு ஆசிரியர் செய்த உபதேசம், எம் எல்லோருக்குமான உபதேசமாக இருக்கட்டும்! இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், தனது மாணவர் ‘அல்முஸனீ’ (ரஹிமஹுல்லாஹ்) என்பவருக்கு இவ்வாறு உபதேசித்தார்கள்:- “அல்லாஹ்வை நீ அஞ்சிக்கொள்; உன் உள்ளத்தில் மறுமையை நிறுத்திப் பார்; உன் கண்கள் இரண்டிற்கும் முன்னால் மரணத்தை வைத்துக்கொள்! அல்லாஹ்வுக்கு முன் நிற்பதை நீ மறந்து விடாதே; அல்லாஹ்விடமிருந்து வரும் விடயங்களில் நடுக்கத்துடனும் அச்சத்துடனும் இரு! மேலும், அவன் தடுத்தவற்றைத் தவிர்ந்துகொள்; அவனின் …

Read More »

வெளித்தோற்றத்தைப் பார்த்து எவரையும் தவறாக எடைபோட்டு விடாதீர்கள்!! [உங்கள் சிந்தனைக்கு… – 060]

வெளித்தோற்றத்தைப் பார்த்து எவரையும் தவறாக எடைபோட்டு விடாதீர்கள்!! இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “(சஊதிஅரேபியாவின்) ரியாத் நகரிலுள்ள கல்விக் கலாபீடமொன்றில் நாம் மாணவர்களாக இருந்துகொண்டிருந்தோம். அந்நேரம் வகுப்பில் நாம் இருந்துகொண்டிருந்தபோது ஷெய்க் ஒருவர் எங்களிடம் வந்தார். அவரை நீங்கள் பார்த்திருந்தால், ‘இவர் ஓர் நாட்டுப்புற அரபியாகத்தான் இருப்பார்; அறிவிலிருந்து கொஞ்சம்கூட இவரிடம் எடுப்பதற்கு இல்லை!’ என்றுதான் நீங்கள் சொல்லியிருப்பீர்கள். அந்தளவு கந்தலான ஆடையுடன் …

Read More »

கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு! [உங்கள் சிந்தனைக்கு… – 059]

கோள்’ செய்தி கொண்டு வந்தவரிடம் மூன்று குற்றங்கள் கண்டுபிடிப்பு! “ஸாலிஹான நல்ல மனிதரொருவரிடம், (அவர் பற்றிக் கூறப்பட்ட) கோள் செய்தியுடன் ஒருவர் வந்தார். வந்து சொன்னவருக்கு அந்த நல்ல மனிதர் கூறினார்: ‘மூன்று குற்றங்களுடன் என்னிடம் நீ வந்திருக்கின்றாய். எனக்கும், (என்னைப் பற்றி கோள் சொன்ன) எனது அந்த சகோதரருக்குமிடையில் நீண்டதோர் இடைவெளித் தூரத்தை நீ ஏற்படுத்தி விட்டாய்! வெறுமனே காலியாகயிருந்த எனது உள்ளத்தை வேலை செய்ய வைத்துவிட்டாய்! எனது …

Read More »

[உங்கள் சிந்தனைக்கு… – 051] நிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்!!

நிர்வாண கோல ஆடை அணியும் பெண், அல்லாஹ்வின் கோபத்தின் அடையாளமாவாள்!! Rochdi Amrane என்பவர் தனது முகநூலில் இவ்வாறு கூறுகின்றார்:- மறைக்கப்பட வேண்டிய அங்க அவயவங்களை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கும் பெண்ணின் நிர்வாண கோல ஆடை, அவள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகியிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். ஏனெனில், (சுவர்க்கத்தில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டிருந்து, ஷைத்தானின் தூண்டுதலினால் அல்லாஹ்வுக்கு மாறு செய்த) ஆதம், மற்றும் ஹவ்வா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோர் மீது அல்லாஹ் கோபம் …

Read More »

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 077]

இஸ்லாத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் நான்கு வகை மனிதர்கள்! ஸூfபித்துவ அறிஞர், முஹம்மத் பின் அல்fபழ்ல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுவதாக அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் நான்கு தரப்பினரிடம் இருக்கின்றபோது, இஸ்லாம் (மதிப்பிழந்து) போய் விடுகின்றது…. அறிந்ததைக்கொண்டு செயல்படாதவர்கள். அறியாததை வைத்து செயல்படுகின்றவர்கள். செயல்படாமலும், அறிந்து கொள்ளாமலும் இருப்பவர்கள். அறிவைத் தேடும் மக்களைத் தடுப்பவர்கள்!”. இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இதை இவ்வாறு விளக்கப்படுத்திக் கூறுகின்றார்கள்: முதலாம் …

Read More »

ஷைத்தானின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாது எச்சரிக்கையாக இருப்போம்! [உங்கள் சிந்தனைக்கு… – 076]

ஷைத்தானின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாது எச்சரிக்கையாக இருப்போம்! அஷ்ஷெய்க் சஈத் அப்துல் அழீம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- ஒவ்வொரு முஸ்லிமும் தான் நோற்றிருக்கும் நோன்பு பாழாகாமல் இருக்கவும், வெறுமனே பசித்திருந்து தாகித்திருந்ததே தனக்கான பங்கு என்றில்லாதிருக்கவும் மனித மற்றும் ஜின் இன ஷைத்தான்களின் தவறான ஊசலாட்டங்களிலிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அல்லாஹ்வின் அடியார்களை ஏமாற்றுகின்ற விடயத்தில் ஷைத்தான் பல வழிகளால் வருவான். “எனது இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டு …

Read More »

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 075]

சோதனைகள் ஏற்பட்டதற்காகச் சோர்ந்துபோய் விடாதீர்கள்! ஷுரைஹ் அல்காழீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சோதனையால் நிச்சயமாக நான் பீடிக்கப்படுவேன். அப்போது, அதற்காக நான்கு தடவைகள் அல்லாஹ்வை நான் புகழ்ந்து கொள்வேன். ஏற்பட்ட சோதனை, அதைவிட மிகப்பெரியதாக இருக்கவில்லை என்பதற்காகப் புகழ்வேன். அதற்காகப் பொறுமையுடன் இருக்கும் பாக்கியத்தை அவன் தந்துள்ளான் என்பதற்காகப் புகழ்வேன். நற்கூலியை நான் ஆதரவு வைத்துப் பெறுவதற்காக, ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ ௭ன்று சொல்லும் பாக்கியத்தை அவன் எனக்குத் …

Read More »