Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு (page 4)

உங்கள் சிந்தனைக்கு

எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்? [உங்கள் சிந்தனைக்கு… – 067]

எப்படியானவருக்கு எனது மகளை நான் திருமணம் முடித்துக் கொடுக்கலாம்? ஒருவர், இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம்: “எனது மகளை எப்படியானவருக்கு நான் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வை அஞ்சி நடப்பவருக்கு முடித்துக் கொடுங்கள்! ஏனெனில், அவளை அவர் நேசித்து விட்டால் அவளை கண்ணியப்படுத்துவார்; அவளை வெறுத்துக் கோபித்து விட்டால் அவளுக்கு அநியாயம் செய்யமாட்டார்”. { நூல்: ‘முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்’, பக்கம்:102 …

Read More »

கோணலை ஒரேயடியாக நிமிர்த்தப் போகாதீர்கள் [உங்கள் சிந்தனைக்கு… – 066]

கோணலை ஒரேயடியாக நிமிர்த்தப் போகாதீர்கள்; ஒடித்து விடுவீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “தமது மனைவிமார்கள் (குணநலன்களில் குறைபாடுகளின்றி) பூரணத்துவமான நிலையில் இருக்க வேண்டும் என்றே கணவன்மார்களில் அதிகமானவர்கள் விரும்புகிறார்கள்! இது, முடியாத விடயமாகும். இதன்மூலம் பெரும் கஷ்டத்தில் இவர்கள் வீழ்ந்து, தமது மனைவிமார்கள் மூலம் இல்லற இன்பத்தையும் ஏனைய சுகத்தையும் அனுபவிக்க முடியாதவர்களாகியும் விடுகின்றனர். சிலவேளை இது, நபியவர்கள் கூறியதுபோல ‘தலாக்’ எனும் மணவிலக்கிற்கும் …

Read More »

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் [உங்கள் சிந்தனைக்கு… – 065]

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!! அஷ்ஷெய்க் முஹம்மத் உமர் பாbஸ்மூல் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நூறு ஒட்டகங்கள் இருந்தால் (பயணத்திற்கு) சரிவரக்கூடியதாக ஒன்று அவற்றில் கிடைப்பது அரிதாக இருப்பது போல, மனிதர்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். (இதை) என் மார்க்கம் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது!” நபி ஸல்லழ்ழாஹு (அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில், பயணத்திற்குப் பயன்படும் …

Read More »

கல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு [உங்கள் சிந்தனைக்கு… – 063]

கல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு இவருக்கும் உண்டு! “யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணிக்கின்றாரோ அவருக்கு அதன் மூலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்” என நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் – 5231) இந்த நபிமொழிக்கு, அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:- “மார்க்க விளக்கச் சட்டம் ஒன்றைப் பெறுவதற்காக …

Read More »

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு…–062]

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எமக்கு முன் வாழ்ந்து சென்ற நல்லோர்களான ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று சொல்லப்பட்டால் அவர் நடுங்கி விடுவார்; சிலவேளை, அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தினால் கீழே விழுந்தும் விடுவார். மனிதர்களில் இந்த நிலையுடையவரை (இக்காலத்திலும்) நாம் கண்டிருக்கின்றோம். அதாவது அம்மனிதரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று நீர் கூறினால் பதற்றமடைந்து …

Read More »

ஷைத்தானின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 062]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எம் பெற்றோரான ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) அவர்களுக்கும் மிக வெளிப்படையான எதிரியாக இருந்தது போலவே ஷைத்தான் எமக்கும் எதிரியாக இருக்கின்றான். அல்லாஹ்வின் அருளிலிருந்து எம்மை அவன் வெளியேற்றி, அல்லாஹ்வின் நரகத்திலும் அவனின் வேதனையிலும் எம்மைப் புகுத்திவிடவே அவன் விரும்புகின்றான். அல்லாஹ் கூறுகிறான்: “ஆதமுடைய சந்ததியினரே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவருடைய வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் இருவருடைய …

Read More »

உலகத்தை அறிந்து, மறுமையை மறந்து வாழும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 061]

“அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை அறிகின்றார்கள். ஆனால், மறுமை பற்றி அலட்சியமானவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்!”. (அல்குர்ஆன், 30:07) என்ற இவ்வசனத்திற்கு பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளரும், பன்னூலாசிரியருமான அல்லாமா இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் அதிகமானோரிடம் இவ்வுலகம், அதன் சம்பாத்தியங்கள், அதன் விவகாரங்கள், அதிலுள்ளவைகள் குறித்த அறிவைத் தவிர வேறெதுவுமே இல்லாதிருக்கின்றது. உலக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், அதன் இலாபங்கள் மற்றும் பயன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் …

Read More »

அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? [உங்கள் சிந்தனைக்கு… – 060]

அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? “(நபியே! நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக!” (அல்குர்ஆன், 07:199) “அறிவீனன் உன்மீது மடமைத்தனம் பிரயோகித்தால், நீயும் மடமைத்தனத்தால் அதை எதிர்கொள்ளாதே!” என இவ்வசனம் தெரிவிக்கின்றது என்று இமாம் பbகவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள். { நூல்: ‘தfப்சீர் அல்பbகவீ’, 02/184 } قال الله تعالى: « خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين » …

Read More »

வயோதிப உற்சாகமும்… வாலிப சோம்பலும்… [உங்கள் சிந்தனைக்கு… – 059]

அஹ்னfப் பின் கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், “நீங்கள் ஓர் வயோதிபர்; நோன்பு உங்களை பலவீனப்படுத்தி விடும்!” என்று கூறப்பட்டது. அதற்கவர், “ நீண்டதோர் பயணத்திற்காக அதை நான் ஆயத்தப்படுத்துகிறேன்!” எனப் பதிலளித்தார்கள். (நூல்: ‘சியரு அஃலாமின் நுbபலா’, 04/91)   قيل للأحنف بن قيس رضي الله عنه: « إنك كبير، والصوم يضعفك… » قال: « إني أعدّه لسفر طويل”. { …

Read More »

புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 058]

புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: சிரித்து மகிழ்ந்து, கேளிக்கைகளில் ஒரு குழு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. புறம், கோள், ‘காட்ஸ்’ விளையாட்டு போன்றவைகளே அவர்களின் சபைகளில் இடம்பெறுகின்றன! அவர்கள் எனது அணியினர்; அவர்களுடன் உட்காருவதால் அநேகமானோருடன் சகோதரத்துவ ரீதியான, வம்ச மற்றும் நட்பு ரீதியான தொடர்பை எனக்கு …

Read More »