Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு (page 5)

உங்கள் சிந்தனைக்கு

நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்… [உங்கள் சிந்தனைக்கு… – 057]

நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்…..?! அல்லாஹ் கூறுகிறான்: “(நல்வழியில்) செலவிடுவதற்கு தம்மிடம் வசதி ஏதும் இல்லையே என்ற கவலையால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும் நிலையில் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். (இத்தகையோர் மீதும் எவ்வித குற்றமும் இல்லை!)” (அல்குர்ஆன், 09:92) இறை வழிபாடாக இருக்கும் நன்மையான செயல் (வசதியின்மை காரணமாக செய்ய முடியாமல்) போனதற்காகத்தான் இவர்கள் அழுதிருக்கிறார்கள்! (இதுவே இப்படியாக இருந்தால்) பாவத்தைச் செய்துவிட்டதற்கான இவர்களின் அழுகை …

Read More »

மார்க்கத்தை தீர்மானிப்பது வஹியா? அல்லது ரஃயியா?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து வந்தவைகளாகும். ரஃயி என்றால் மனிதனின் சுய சிந்தனையின் மூலம் வந்தவைகளாகும். மார்க்கம் என்பது அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு வஹியின் மூலமாக கொடுக்கப்பட்டதாகும். வஹியாக கொடுக்கப்பட்ட மார்க்கத்தில் அல்லாஹ் சொல்லாத, அல்லது நபியவர்கள் அனுமதி வழங்காத எந்த ஒன்றையும் மார்க்கமாக செயல் படுத்த முடியாது. அப்படி செயல் படுத்தினால் அவர்கள் தெளிவான வழிகேடர்கள் என்று அல்லாஹ் பின் வருமாறு எச்சரிக்கிறான். …

Read More »

கண்ணியமிகு மார்க்கத்தை விட்டும் ஓடிப்போய் விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 056]

காம இச்சையைத் தீர்ப்பதற்காக கண்ணியமிகு மார்க்கத்தை விட்டும் ஓடிப்போய் விடாதீர்கள்! அனஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:- “(எனது தந்தை ‘மாலிக் பின் நள்ர்’ அவர்கள் மரணித்ததன் பின்னால் விதவையாக இருந்த எனது தாய்) ‘உம்மு சுலைம் பின்த் மில்ஹான்’ (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்களை மணம் முடிக்க விருப்பம் கேட்டு ‘அபூதல்ஹா’ என்பவர் வந்தார். அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை! எனது தாய் அவரிடம், ‘உம்மை முடிக்க எனக்கு நல்ல …

Read More »

மழை தடைபட்டு, வறட்சி நிலவ என்ன காரணம்? [உங்கள் சிந்தனைக்கு… – 055]

மழை தடைபட்டு, வறட்சி நிலவ என்ன காரணம்? “அவர்கள் (இஸ்லாம் எனும்) இவ்வழியில் உறுதியாக இருந்திருந்தால், தாராளமாகத் தண்ணீரை நாம் அவர்களுக்குப் புகட்டியிருப்போம்!” (72:16) என்ற இந்த அல்குர்ஆன் வசனத்திற்கு அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள்:- “இது, அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் வாக்குறுதியொன்றாகும். அதாவது: மார்க்கத்தைப் பின்பற்றி, ஏவல்களுக்கு வழிப்பட்டு, விலக்கல்களைத் தவிர்ந்து நடத்தல் என்று அல்லாஹ் வரைந்துள்ள (இஸ்லாம் எனும்) இவ்வழியில் …

Read More »

நான் ஏன் உங்களை நேசிக்கின்றேன் தெரியுமா? [உங்கள் சிந்தனைக்கு… – 054]

நான் ஏன் உங்களை நேசிக்கின்றேன் தெரியுமா? “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத மறுமை நாளில், அவனின் நிழலுக்குக் கீழே உங்களுடன் எனக்கும் அல்லாஹ் நிழல் தர வேண்டும் என உறுதியாக நான் பிரார்த்தித்துக் கொள்கின்றேன். கடும் உஷ்ணமும், கடும் வியர்வையுமுள்ள அந்நாளில்…… சூரியன் தலைகளுக்குச் சமீபமாக இருக்கும்… கடும் நெரிசல் காணப்படும்…. அதிகமான பாவங்களும் இருந்து கொண்டிருக்கும்…. அப்போது, “என் மகத்துவத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நேசம் …

Read More »

அறிவுகளில் ஆகப் பிரதானமானது… [உங்கள் சிந்தனைக்கு… – 053]

அறிவுகளில் ஆகப் பிரதானமானது, அல்லாஹ்வைச் சரியாக அறிந்து கொள்ளும் அறிவாகும்! ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வை (ச் சரியாக) அறிந்து கொள்ளும் அறிவுதான், அவன் படைப்புகளை அறிந்து கொள்வதைவிட மிகச் சிறந்த அறிவாகும். இதனால்தான் ‘ஆயதுல் குர்சீ’, அல்குர்ஆனில் அதி சிறப்புக்குரிய ஆயத்தாக (வசனமாக) இருக்கின்றது! ஏனெனில், அல்லாஹ்வின் தன்மையை அது உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. மேலும், ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ என்ற (அல்இஹ்லாஸ்) அத்தியாயம் அல்குர்ஆனின் …

Read More »

பெற்றோர்களே! பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடைப்பிடியுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 052]

பெற்றோர்களே! பிள்ளை வளர்ப்பில் கட்டாயம் இதைக் கடைப்பிடியுங்கள்!! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சட்டங்களை ஆதாரங்களுடன் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது (பெற்றோர்களுக்கு) அவசியமாகும். உதாரணமாக: ‘சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரை நீ கூறு; சாப்பிட்டு முடித்துவிட்டால் அல்லாஹ்வைப் புகழ்ந்துகொள்!’ என்று உங்கள் பிள்ளைக்கு நீங்கள் சொல்ல விரும்பி, இதைச் சொல்லிக்கொடுத்தும் விட்டீர்கள் என்றால் நோக்கம் நிறைவேறி விடும். என்றாலும் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு, “சாப்பிடும்போது அல்லாஹ்வின் பெயரை …

Read More »

நன்றிகெட்ட மனிதர்களாக இருக்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 051]

நன்றி கெட்ட மனிதர்களாக இருக்காதீர்கள்! அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக மனிதன் தன் இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன், 100:06) “சோதனைகளைக் கணக்கிலெடுத்து, தனக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை மறந்து வாழ்பவனே நன்றி கெட்டவன்!” எமக்கு முன் வாழ்ந்து மறைந்த ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவர் வழுக்கைத் தலை உடையவராகவும், உடல் குஷ்டரோகமுடையவராகவும், இரு கண்கள் பார்வையற்றவராகவும், இரு பாதங்கள் மற்றும் இரு கைகளும் இயங்காதபடி சூம்பிப்போனவராகவும் இருந்தார். அவர், “படைத்த …

Read More »

உலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’! [உங்கள் சிந்தனைக்கு… – 050]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதனின் பதிவேட்டில் இருக்கின்ற ஒரு தஸ்பீஹ், இவ்வுலகையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். ஏனெனில், இவ்வுலகமும் அதிலுள்ளவையும் அழிந்து போகக்கூடியவை; (நிலைக்காது) நீங்கிவிடக் கூடியவை. தஸ்பீஹும், நற்செயலும் நிலைத்து நிற்கக்கூடியவையாகும்!” { நூல்: ‘ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்’, 03/478 } قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:- [ إن التسبيحة الواحدة في صحيفة …

Read More »

மூவகை நண்பர்களில் நீங்கள் எவ்வகை? [உங்கள் சிந்தனைக்கு… – 049]

மூவகை நண்பர்களில் நீங்கள் எவ்வகை?! [உங்கள் சிந்தனைக்கு… – 049] அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நண்பர்கள் மூன்று வகைப்படுவர்: 1) பயனை எதிர்பார்த்துப் பழகும் நண்பன்: பணம், சொத்துபத்து; அல்லது பதவி, அந்தஸ்து; அல்லது இவையல்லாத வேறு ஒன்றின் மூலம் உன்னிடமிருந்து பயன்பெறும் காலமெல்லாம் உன்னுடன் இவன் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பான். பயன்பாடு நின்றுபோய் விட்டால் உன்னை அவன் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கும், நீ …

Read More »