Featured Posts
Home » Tag Archives: பொதுவானவை (page 2)

Tag Archives: பொதுவானவை

சட்டம் ஒரு விளையாட்டு?

# கொலைக் குற்றவாளி சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை. # கொலைக் குற்றவாளியும் பா.ஜ.க.முன்னாள் எம்.பியுமான நவ்ஜோத் சிங் சித்து ஜாமீனில் விடுதலை.http://www.dinamalar.com/2007jan13/specialnews1.asp?newsid=3 # நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்ஷல் குருவின் மரண தண்டனையை பரிசீலிக்க வேண்டிய மணுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.http://www.dinamalar.com/2007jan13/court_ind1.asp # சென்னை மாநகராட்சி தேர்தல்- ஒரே வழக்கிற்கு நீதிபதிகளின் முரண்பட்ட இரு தீர்ப்புகள்! http://www.dinamalar.com/2007jan13/specialnews1.asp?newsid=1 # நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி அநியாயமாகத் …

Read More »

திரைப்படங்களில் முஸ்லிம்கள் நிலை!

அலிபாபா, சிந்துபாத், அலாவுதீன் போன்ற சாகாசக் கதாபத்திரங்களுக்கு அடுத்தபடியாக தெனாலிராமன், மரியாதை ராமன் கதைகளுக்கு இணையாக முல்லா நஸ்ருதீன் என்ற கதாபாத்திரத்தை நம்மில் பெரும்பாலோர் அறிந்திருப்போம். மேற்சொன்ன இரு ராமன்களும் சமயோஜிதமாக செயல்பட்டு கதாபாத்திரங்களுக்கு உறுதுனையாக இருப்பர்.ஆனால் முல்லா நஸ்ருதீன் முட்டாள்தனமாகச் செயல்பட்டாலும் அதை சமாளித்து தன்னை அறிவாளியாகக் காட்டிக் கொள்வதாகச் சொல்லப்படும். அதுபோலவே, சமீப வருடங்கள் முன்புவரை சினிமாக்களிலும் முஸ்லிம் கதாபாத்திரங்கள் அப்பாவித்தனமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களுக்கு …

Read More »

அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!

இஸ்லாம் ஒரு பழமைவாதம்! முஸ்லிம்கள் தீவிரவாதிகள்!! திருக்குர்ஆன் முஹம்மது நபியின் உள்மன வெளிப்பாடு!!! என்ற ஒப்பாரிகள் ஊடகங்களிலும் இணையத்திலும் காதைக்கிழித்த போதிலும், தன்னுள் எரியப்பட்ட கல்லையும் உள்வாங்கி அலைகளை மட்டும் பதிலாகச் சொல்லும் சமுத்திரம் போல் இஸ்லாம் மனிதமனங்களில் அலைவரிசைகளை ஏற்படுத்திக் கொண்டே வந்துள்ளது. அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று அமெரிக்கா அலறியது! அதே வருடம் அமெரிக்காவில் இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று …

Read More »

சதாம் ஹுசைன் ஒரு சர்வாதிகாரியா?

அரபுலகின் ஆண்மையுள்ள ஆட்சியாளர்களில் ஒருவரான சதாம் ஹுசைனை முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் ஈதுல் அல்ஹா (பக்ரீத் பண்டிகை) அன்று அமெரிக்க எடுபிடிகள் தூக்கிலிட்டுக் கொன்றுள்ளனர். ஈராக் அதிபர் சதாம் என்னதான் கொடுரமானவராக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களும் நியாயவான்களும் சதாமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனன அநீதியானது என்றே கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்க மக்கள், இதற்குக் காரணமான கயாவளி ஜார்ஜ் புஷ்ஷின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்டும் விதமாக சென்ற மாதம் நடந்த இடைக்கால …

Read More »

கோர்ட்டுக்கு வந்த ஒட்டகம்! (பகுதி-2)

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகங்களை பலியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பக்ரீத் பண்டிகை ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆடு, மாடுகளை குர்பானி பலியாக கொடுப்பது வழக்கம். அதே போல ஒட்டகங்களும் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் 8 ஒட்டகங்களை சென்னைக்குக் கொண்டு வந்துள்ளது. வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் உள்ள மசூதியில் இந்த ஒட்டகங்கள் …

Read More »

இயேசுவை அவமதிக்கவா கிறிஸ்துமஸ்?

இயேசுவை அவமதிக்கவா கிறிஸ்துமஸ்? முஹம்மது நபிக்கு முந்தைய இறைத்தூதர் என்ற வகையில் இயேசுவை முஸ்லிம்கள் முஹம்மது நபிக்கு இணையாக மதிக்கிறார்கள்.இயேசுவின் உண்மையான போதனைகளைப் பின்பற்றுவதோடு,அவர் தடுத்தவற்றை இன்றளவும் பின்பற்றி இயேசுவைக் கண்ணியப்படுத்துவதில் முஸ்லிம்களே முன்னனியில் இருக்கிறார்கள். இயேசுவின் முக்கியமான போதனைகளில் ஒன்றான மது,விபச்சாரம் போன்ற பாவச்செயல்களை இஸ்லாம் ‘ஹராம்’ என்று தடுக்கிறது. கிறிஸ்துவின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மதுவுடன் தொடங்கும் களியாட்டங்கள் பைபிள் தடுக்கும் பெரும் தீமைகளுடனேயே …

Read More »

சபாஷ்!!!

IIM-இல் சேர்வதற்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட மாணவனிடம்,தேர்வாளர் “பத்து சுலபமானக் கேள்விகளைக் கேட்கவா? அல்லது ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேட்கவா? என்றார். மாணவனுக்கு சற்று குழப்பமாக இருந்தது. சில நொடிகள் கண்களைமூடி நன்கு யோசித்து “ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேளுங்கள்!” என்றான். தேர்வாளர்: உன் பதிலை வைத்தே உன்னை கல்லூரியில் சேர்ப்பதும் கேர்க்காததும் முடிவு செய்யப்படும். ஆகவே, நன்கு யோசித்து தெரிவு செய்!. மாணவன்: நம்பிக்கையாகச் சொல்கிறேன்! ஒரேயொரு கடினமான …

Read More »

பர்தாவும் பைபிளும்

சிலவருடங்களுக்கு முன் இலண்டனில் இஸ்லாத்தில் இணைந்த சகோதரிகளிடம் பிரபல ஊடக நிருபர், “நேற்றுவரை உங்களின் உணவுப் பழக்கம், நண்பர்கள், உறவுகள் அப்படியே இருக்கின்றன; இஸ்லாத்தில் இணைந்த பிறகு ஏன் உடையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டது? என்றார். அதற்கு அவர்கள், இவ்வுடையில் எங்களின் தனித் தன்மை பாதுகாக்கப் படுவதாக உணர்கிறோம்” என்றார்கள். அதேபோல்,நாகர்கோவில் பகுதியில் நடந்த பெண்ணியக் கருத்தரங்கில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர், “இஸ்லாம் பெண்களை பர்தா போட்டு அடிமைப்படுத்துகிறது. …

Read More »

ஆபாசம் Vs. அமெரிக்கா

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்யவிருந்த ஒருதாய், தன் குழந்தைக்கு பாலூட்டிய போது, விமானப் பணிப்பெண் ஒரு சால்வையைக் கொடுத்து மார்பை மறைத்துக் கொண்டு பாலூட்டச் சொன்னாராம். பொது இடத்தில் குழந்தைக்கு பாலூட்டும் உரிமையை யாரும் தடுக்க முடியாது என்று அத்தாய் மறுத்துவிட்டதால், பொது இடத்தில் ஆபாசமாக நடந்ததாகக் கூறி விமானத்திலிருந்து குடும்பத்துடன் இறக்கி விடப்பட்டிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இச்சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் பெண்ணுரிமை அமைப்புகளிடம் எடுத்துச்சென்று சம்பந்தப்பட்ட …

Read More »

மலம், மூத்திரம், நேசகுமார், கார்ட்டூன்

இந்தப் பதிவிற்கு கொஞ்சம் நாகரிகமாகத் தலைப்பிடத்தான் நினைத்தேன். ஆனால், தமிழிணையத்திலும் வலைப்பூக்களிலும் சாமான்யர் வேடமிட்டு ஏமாற்றி வந்த நேசகுமார் என்ற புனைவு(ச்சுருட்டு) நபரின் வேஷம் கலைக்கப்பட்டு விட்டதால் நிதானமிழந்து, தன்மீதான புனித பிம்பம் தகர்க்கப் பட்டால் தன்னால் எவ்வளவு தாழ்நிலைக்கும் இறங்க முடியும் என நிரூபித்து , தன் பதிவில் அநாகரிகப் பின்னூட்டங்களை அனுமதித்து, சபைநாகரிகம் மீறிய அவரின் போக்கால், அத்தகைய எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் . சென்ற வருடம், …

Read More »