Featured Posts
Home » ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ (page 6)

ஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ

உங்கள் பிள்ளைகள் உங்களுக்கெதிராக அல்லாஹ்வின் முன்னிலையில் வாதிடக்கூடாது! [உங்கள் சிந்தனைக்கு… – 031]

“உங்கள் மகனோ அல்லது மகளோ ஏன் அவர்களை நீங்கள் சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லவில்லை என்றோ, அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை ஏன் அவர்களுக்கு நீங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்றோ, அல்லது உடற்பயிற்சி கிளப்களில் அவர்களை நீங்கள் ஏன் சேர்த்துவிடவில்லை என்றோ, அல்லது மார்க்கெட்டுகளுக்கு ஏன் அவர்களை நீங்கள் கூட்டிச்செல்லவில்லை என்றோ நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் உங்களைப் பற்றி முறைப்பாடு செய்யவேமாட்டார்கள். என்றாலும் அவர்கள், அல்லாஹ்விடம் தமது முறைப்பாடுகளை இப்படிக் …

Read More »

ரமளானில் ஸஹாபாக்களின் நிலை [உங்கள் சிந்தனைக்கு… – 030]

அபுல் முதவக்கில் அந்நாஜீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அபூஹுரைரா (ரழி) அவர்களும், அவரின் தோழர்களும் நோன்பு நோற்றுவிட்டால் பள்ளிவாசலில் உட்கார்ந்து கொண்டு, ‘எமது நோன்பை நாம் தூய்மைப்படுத்திக் கொள்வோம்!’ என்று சொல்லிக் கொள்வார்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘எமது நோன்பை நாம் பேணிப் பாதுகாத்துக் கொள்வோம்!’ என்று சொல்லிக்கொள்வார்கள் என வந்துள்ளது. { நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’ 01/382 , ‘அஸ்ஸுஹ்த்’ லில் இமாம் அஹ்மத் – பக்கம்: 992 } قال …

Read More »

இலாபத்தை இழக்க வைக்கும் கவனயீனம்! [உங்கள் சிந்தனைக்கு… – 029]

அல்லாமா இப்னுல் ஜவ்ஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “கவனயீனம் இலாபத்தை இழக்கச் செய்து விடும்; பாவம் நஷ்டத்தை ஏற்படுத்தும்; கவனயீனம் சுவர்க்கத்தின் வாசல்களை அடைத்து விடுகிறது; பாவம் நரகத்தின் வாசல்களைத் திறந்து விடுகின்றது!” { நூல்: ‘அத்தஸ்கிரா’, பக்கம்: 103 } قال العلّامة إبن الجوزي رحمه الله تعالى:- [ الغفلة تحرم الربح؛ والمعصية توجب الخسران! الغفلة تغلق أبواب الجنة؛ والمعصية تفتح أبواب …

Read More »

நோன்பும்… ஜிஹாதும்… [உங்கள் சிந்தனைக்கு… – 028]

அறிஞர்களின் பார்வையில்…. நோன்பும் ஜிஹாதும்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அல்லாஹ்வின் அடியார்களே! நாம் ரமழான் மாதத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். இங்கே ஜிஹாதுக்கும் நோன்புக்குமிடையில் வலுவானதோர் தொடர்பு காணப்படுகின்றது. அதாவது, உணவு மற்றும் பானம் ஆகியவற்றின் ஆசையை வெற்றிகொள்ளக்கூடியதாக நோன்பு இருக்கிறது; ஜிஹாதோ, இவ்வுலக வாழ்க்கை மீது கொள்ளும் பேராசையைக் கழற்றி வெற்றியைக் கொடுக்கின்றது. எதிரிகளுக்கெதிராக வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஜிஹாத் என்றிருக்குமாக இருந்தால், நோன்பு உள்ளத்திற்கெதிராகப் …

Read More »

சஹர் உணவின் பரக்கத்தை இழந்து விடாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 027]

சஹர் உணவின் bபரக்கத்தை இழந்து விடாதீர்கள்! அல்லாமா அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா பின் பாஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்: “நீங்கள் சஹர் செய்யுங்கள்; நிச்சயமாக சஹர் செய்வதில் bபரக்கத் (அல்லாஹ்வின் அருள் வளம்) இருக்கிறது!’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்காக வேண்டி கொஞ்சமாக இருப்பினும் சஹர் உணவு உண்பதை விட்டு விடாமலிருப்பது நோன்பாளிக்கு அவசியமாகும். இந்த அருள் வளம் வீணடிக்கப்படலாகாது; மார்க்க மற்றும் உலகியல் ரீதியான பகல் நேர …

Read More »

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! [உங்கள் சிந்தனைக்கு… – 026]

சஹருக்கு பல மணி நேரங்கள் முன்பாக எழுந்து ‘விடி சஹர்’ செய்வோர் விடுகின்ற தவறுகள்! “இன்னும் fபஜ்ர் (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்!” (அல்குர்ஆன், 02: 187) அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் …

Read More »

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது! [உங்கள் சிந்தனைக்கு… – 025]

ரமழானின் இரவுகளில் குர்ஆன் ஓதுவது அதிக சிறப்புக்குரியது! பாத்திமா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இருமுறை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்கள்!” { நூல்: புகாரி, …

Read More »

நோன்பாளி, இப்படித்தான் இருக்க வேண்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 024]

நோன்பாளி, இப்படித்தான் இருக்க வேண்டும்! அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உண்மையான நோன்பாளி யாரென்றால், அவருடைய உடல் உறுப்புகள் பாவங்களை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்; அவருடைய நாவு பொய், அருவருப்பான பேச்சு, கெட்ட வார்த்தை ஆகியவற்றை விட்டும் விலகியிருக்க வேண்டும்; அவருடைய வயிறு உண்பதை விட்டும், குடிப்பதை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்; அவருடைய வெட்கஸ்தலம் உடலுறவு கொள்வதை விட்டும் விலகியிருக்க வேண்டும்; அவர் பேசினால் தனது நோன்புக்கு …

Read More »

வழி காட்டும் கழுதையும், வழி தெரியாதிருக்கும் சில மனிதர்களும்! [உங்கள் சிந்தனைக்கு… – 023]

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- “மிருகங்களிலேயே ஆகப் புத்தியற்ற மிருகமாக கழுதை இருந்தும், (போகும் இடத்திற்கான) வழியைக் காட்டுகின்ற தன்மை அதிலே இருக்கிறது. எப்படியெனில், ஒரு மனிதன் அதிலே பயணம் மேற்கொள்கிறான்; தூரத்திலிருந்து இருள் நிறைந்த இரவில் அவனை அது கொண்டு சென்று அவனது வீட்டை சரியாக அறிந்து கொள்கிறது; தனிமையில் விடப்பட்டாலும் அவனின் வீட்டிற்கு அது வந்து சேர்ந்து விடுகிறது; தன்னை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற சத்தம், …

Read More »

வேர்களைப் பாழ்படுத்தி, கிளைகளைப் பாதுகாக்கும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 022]

இமாம் இப்னுல் ஜவ்சீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் அதிகம் பேரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் அசுத்தமொன்றைத் தெளித்து பூசிக்கொள்ளாதவாறு பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் இருந்து கொள்கிறார்கள்; ஆனால், புறம்பேசுவதிலிருந்து விலகித் தூரமாகாமல் அவர்கள் இருந்து விடுகின்றார்கள்! தானதர்மங்களை அவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள்; ஆனால், வட்டியுடன் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் அவர்கள் கணக்கில்லாமல் இருக்கிறார்கள்! இரவில் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகிறார்கள்; ஆனால், பர்ழான தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் பிற்படுத்துகிறார்கள்! இவ்வாறு, அடிப்படைகளைப் …

Read More »