Featured Posts
Home » பொதுவானவை (page 29)

பொதுவானவை

மூவகை நண்பர்களில் நீங்கள் எவ்வகை? [உங்கள் சிந்தனைக்கு… – 049]

மூவகை நண்பர்களில் நீங்கள் எவ்வகை?! [உங்கள் சிந்தனைக்கு… – 049] அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நண்பர்கள் மூன்று வகைப்படுவர்: 1) பயனை எதிர்பார்த்துப் பழகும் நண்பன்: பணம், சொத்துபத்து; அல்லது பதவி, அந்தஸ்து; அல்லது இவையல்லாத வேறு ஒன்றின் மூலம் உன்னிடமிருந்து பயன்பெறும் காலமெல்லாம் உன்னுடன் இவன் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பான். பயன்பாடு நின்றுபோய் விட்டால் உன்னை அவன் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கும், நீ …

Read More »

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாகிகள் [உங்கள் சிந்தனைக்கு… – 048]

அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாகிகள், சுவர்க்கத்தின் வாடையைக்கூடப் பெறமாட்டார்கள்!  [உங்கள் சிந்தனைக்கு… – 048] நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றதைத் தான் செவியேற்றதாக மஃகில் பின் யசார் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:- “மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் மனிதருக்கு வழங்கியிருக்க, அவர் அம்மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் மரணித்துவிட்டால், அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்யாமல் இருக்கமாட்டான்!” ( நூல்: முஸ்லிம் …

Read More »

இறைவிசுவாசிக்குப் பலத்தைப் பெற்றுக்கொடுக்கும் ‘திக்ர்’! [உங்கள் சிந்தனைக்கு… – 047]

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “(அல்லாஹ்வை) திக்ர் செய்தல், திக்ர் செய்பவருக்கு நல்ல பலத்தைக் கொடுக்கிறது. எந்தளவுக்கென்றால், திக்ர் இல்லாமல் செய்ய முடியாதிருக்கும் ஓர் விடயத்தை திக்ருடன் ஒருவர் உண்மையாகவே செய்து விடுகின்றார். ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் நடை அமைப்பிலும், அவரின் பேச்சிலும், அவரின் வீரத்திலும், எழுத்திலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பலம் இருந்ததை நான் நேரடியாகவே பார்த்தேன். புத்தகம் ஒன்றைத் தொகுத்து எழுதக்கூடிய …

Read More »

அல்லாஹ் இட்ட வரம்புகள், சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் அல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 046]

“(கொஞ்சம் இப்படிக்) கற்பனை செய்துபார்! நீ நடந்து செல்லும் உன் பாதையில், ‘முன்னே செல்லத் தடை; மிதிவெடிகள் புதைக்கப்பட்ட பகுதி இருக்கிறது!’ என்று எழுதப்பட்ட அறிவித்தல் பதாகை காணப்படுகிறது. அப்போது, ‘தடை!’ என்ற வார்த்தையைச் சொல்லி (எழுதி) அப்பதாகையை வைத்தவன் மீது உன் மனதில் குரோதம் ஏற்படுவதை நீ கண்டு கொள்ளவேமாட்டாய்!. மாறாக, அதற்காக நீ அவனுக்கு நன்றி செலுத்துவாய். அப்பதாகை, உன் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டதென்றும் நீ சிந்திக்கவேமாட்டாய்! …

Read More »

வேண்டாம் இந்நிலைப்பாடு! [உங்கள் சிந்தனைக்கு… – 045]

இமாம் வஹ்ப் இப்னுல் வர்த் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “உள்ளே ஷைத்தானின் நண்பனாக நீ இருந்துகொண்டு, வெளியே அவனைத் திட்டாதே. அல்லாஹ்வை நீ அஞ்சிக்கொள்!”. { நூல்: ‘ஸிfபதுஸ் ஸfப்வா’, 03/135 }   قال الإمام وهب بن الورد رحمه الله تعالى:- [ ولا تسبّ الشيطان في العلانية، وأنت صديقه في السّرّ. إتّق الله! ] { صفة الصفوة، ٣/ ١٣٥ …

Read More »

ஒரு வகையில் இவர்கள் சுயநலவாதிகளே! [உங்கள் சிந்தனைக்கு… – 044]

ஒரு வகையில் இவர்கள் சுயநலவாதிகளே! அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: “மனிதர்களில் அதிகமானோரின் நிலையை நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்த்தால், ‘தமக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய உரிமையையே அவர்கள் பார்க்கின்றார்கள்; தாம் அவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைப் பார்க்காதிருக்கின்றார்கள்!’ என்றிருப்பதாகவே அவர்களை நீங்கள் கண்டு கொள்வீர்கள். இங்குதான் இவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம்மைத் துண்டித்துக் கொள்கின்றனர்; மேலும் அவனை அறிவதை விட்டும், அவனை அன்பு கொள்வதை விட்டும், …

Read More »

இறைமறை ஓதலில் இன்பம் கண்டவருக்கு… [உங்கள் சிந்தனைக்கு… – 043]

இறைமறை ஓதலில் இன்பம் கண்டவருக்கு அதைச் சிறையில் ஓதுவது சிரமமாகவே இருக்காது! “ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தன் வாழ்வின் இறிதிக்காலப் பகுதியில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார்கள். அதில், 80 தடவைகள் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்தார்கள். 81-வது தடவை அல்குர்ஆனை அவர் ஓத ஆரம்பித்து, ‘நிச்சயமாக பயபக்தியாளர்கள் சுவனச் சோலைகளிலும், ஆறுகளிலும் இருப்பார்கள்.? வலிமைமிக்க அரசனிடம் உண்மையான இருப்பிடத்தில் அவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள்’. (அல்குர்ஆன், …

Read More »

மணமகன் – மணமகள் தெரிவில்…. [உங்கள் சிந்தனைக்கு… – 042]

மணமகன் – மணமகள் தெரிவில் மார்க்கமே அளவுகோலாக இருக்கட்டும்! அஸ்மா பின்த் அபீபக்ர் (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறுகின்றார்கள்: “(மக்காவில் இருக்கும்போதே) என்னை ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் மணந்து கொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும், அவரின் குதிரையையும் தவிர வேறு எந்த சொத்துபத்துகளும், அடிமைகளும், உடைமைகளும் இருக்கவில்லை!”. (நூல்: புகாரி – 5224) இஸ்லாமியப் பேரறிஞர் இமாம் குர்துபீ (ரஹிமஹுல்லாஹ்) …

Read More »

பிறை 13, 14 மற்றும் 15 (வெள்ளை நாட்களில்) நோன்பு வைப்பதின் சட்டம்?

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 28-05-2018 (திங்கள்கிழமை) வெள்ளை நாட்களில் (பிறை 13, 14, 15) நோன்பு வைப்பதின் சட்டம்: ஸஹாபாக்கள் கூடுதலாக செய்தியை சேர்த்து அறிவித்தார்களா? ஹதீஸ் மறுப்பு கொள்கையுடையோரின் வாதம் சரியா? (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் …

Read More »

எச்சரிக்கை! – மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! (Book)

எச்சரிக்கை! மக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்! بسم الله الرحمن الرحيم تشرف بإعداد وترجمة هذا الكتاب شعبة توعية الجاليات بالزلفي وزارة الشؤون الإسلامية والأوقاف والدعوة والإرشاد الزلفي11932 – طريق الملك فهد – ص.ب: 182 ت: 064234466 – فاكس: 064234477 حساب الطباعة: 6960/1 – الحساب العام: 6959/3 شركة الراجحي المصرفية – فرع الزلفي …

Read More »