Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு (page 4)

நாட்டு நடப்பு

சந்தேகம் களைந்து சமூக நல்லிணக்கம் வளர்ப்போம்

  இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடி நிறைந்த சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம் அரசியல் வாதிகளின் அரசியல் நலன்களுக்காக அவர்கள் நசுக்கப்படுகின்றனர். மறுபுறம் வியாபார நோக்கங்களுக்காக அவர்கள் நெருக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் இனவாத, மதவாத சக்திகளின் வன்முறைகளையும் வசைபாடல்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் இலங்கை மக்கள் மத்தியில் அவர்கள்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். ஒரு நாடு இருந்தால் அதில் பல குற்றங்கள் புரிகின்றவர்கள் இருப்பார்கள். ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர் …

Read More »

தேர்தல் முடிவுகள் பலவீனமும்… படிப்பினைகளும்…

திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளாட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி …

Read More »

உனது உயிருக்காக நீ போராடு…

மௌலவி. யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர். ஒரு மனிதனை படைப்பதும், அழிப்பதும், அல்லாஹ்வின் கடமையாகும். ஒரு மனிதன் எப்படி மரணிப்பான், எந்த நிலையில் மரணிப்பான், எந்த இடத்தில் மரணிப்பான் என்ற அனைத்து விவகாரங்களையும் அறிந்த ஒருவன் அல்லாஹ் மட்டும் தான் என்ற தெளிவான நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு மனிதனின் மரணத்தின் முடிவை வைத்து இது நல்ல மைய்யத்து, இது கெட்ட மைய்யத்து என்று உலகில் யாருக்கும் உறுதியான தீர்ப்பு கொடுக்க முடியாது. பொதுவாக உலக நடை …

Read More »

அன்புள்ள வேட்பாளருக்கு!

உரோமர் தகர்த்தெறிந்த உஸ்மானிய பேரரசு வேண்டாம் மங்கோலியர் படையெடுத்த அப்பாசியர் ஆட்சியும் வேண்டாம் மார்க்கத்தின் பெயரால் மரணமும் இனத்தின் பெயரால் இயலாமையும் இக்கணமே முடிய வேண்டும் அது உங்கள்ட வரவால் வேண்டும் இன்னும், தலைமைக்குத் தகுதி வேண்டும் தர்க்கங்கள் தவிர்க்க வேண்டும் தார்மீகம் கொள்கையாகி அதில் ஆன்மீகம் ஜொலிக்க வேண்டும் எதிரி பலம் உணர வேண்டும் எதிரி வாழ்வியலும் நீங்களறிய வேண்டும் சுயவிசாரணை செய்தேனும் உங்கள் பலவீனம் போக்க வேண்டும் …

Read More »

இலங்கை தற்போதைய நிலவரமும், ஈமானிய உள்ளமும்

இலங்கை தற்போதைய நிலவரமும், ஈமானிய உள்ளமும் அஷ்-ஷைக். அஜ்மல் அப்பாஸி அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

எங்களுக்கு வெற்றியே!

காரியாலயத்தில் கடமையாற்றும் (பெரும்பான்மை)மாற்றுமத உத்தியோகத்தர்கள் வழமைபோன்று அன்றும் முகமனுடன் என்னைக் கடந்து சென்றார்கள். அதற்கு முதல்நாள் நடைபெற்றிருந்த பேரினவாதக் கலவரத்தினால் ஏற்பட்ட பதற்றமும் கவலையும் சேர்ந்து செயற்கையானதொரு புன்னகையுடன் எனது பதில் வெளிப்பட்டது. எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும்தான். பதற்ற நிலைமை என்பதால் மாற்றுமத ஊர்களிலுள்ள காரியாலயங்களுக்குப் போக வேண்டிய முஸ்லிம் உத்தியோகத்தர்கள் அங்கே போகத் தயங்கிய அதேவேளை, முஸ்லிம்கள் செறிந்த எமது ஊர்க் காரியாலயத்திற்குச் சமுகமளித்த மாற்றுமத உத்தியோகத்தர்கள் …

Read More »

பயனாளிகளும் பங்கீடுகளும்

அரசாங்கத்தினால் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட சில அத்தியவசியப் பொருட்கள் வருமானம் குறைந்த பயனாளிகளுக்கிடையில் பங்கிடப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அது. அந்தச் சன சந்தடிக்குள்ளும் உள் நுழைகிறேன். ஒரு உரையாடல் என் காதில் விழுகிறது. முதலாமவர்- “வாகனமும் வைத்துக் கொண்டு உழைக்கிறான்… அந்தாளுக்கு எப்படி சேர் நிவாரணம் கொடுப்பீங்க…” இரண்டாமவர்- “வாகனம் என்கிட்ட இருக்குறது உண்மைதான்… ஆனா அது என்ட பெயர்ல இல்லயே…” ஒரு தெனாவெட்டும் சட்டம் சார்ந்ததுமாய் வெளிப்படுகிறது இரண்டாமவரின் பேச்சு. …

Read More »

சவூதி அரபிய அறிஞரின் அபாயா பற்றிய பத்வாவின் உண்மை நிலை

சவுதி அரபிய அறிஞரின் அபாயா பற்றிய பத்வாவின் உண்மை நிலை அஷ்-ஷைய்க். அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் Video: Bro Hameed (Tenkasi)

Read More »

பலஸ்தீனப் பிரச்சினையும்… இஸ்லாத்தின் தீர்வும்…

ரொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அவமானச் சின்னம்! பொது இடத்தில் பெண்களுடன் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் நடந்து கொள்ளும் இயல்பு கொண்டவர். இஸ்ரேல்! அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்ட கள்ளக் காதலில் கருத்தரித்த ஈனப் பிறவி! சட்டவிரோத இந்த நாட்டின் தலைநகராக ஜெரூஸலத்தை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இவரின் அநியாயமான, அடாவடித்தனமான சட்ட விரோத அறிவிப்பால் முஸ்லிம் உலகு கொதித்துப் போயுள்ளது. இவரின் அறிவிப்பின் மூலம் மீண்டும் பலஸ்தீனம் பற்றிய எண்ணம் மேலெழுந்துள்ளது. இது …

Read More »

மியன்மார்: இனசங்காரத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள்

-எம். ஐ அன்வர் (ஸலபி)- ஐ.நா வின் அறிக்கையின்படி உலகில் இன்று தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும், அதேநேரம் மோசமான மனித அழிவை சந்தித்துவரும் சிறுபான்மை சமூகக் குழுவாக ரோஹிங்ய முஸ்லிம்கள்அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மியன்மார் அரசாங்கத்தின் முஸ்லிம் சிறுபான்மையான ரோஹிங்யர்களின் மீதான ஒடுக்குமுறை சர்வதேச நாடுகளின் கவனத்தைக் ஈர்த்துள்ள மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது. மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அதிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் …

Read More »