Featured Posts
Home » நூல்கள் (page 22)

நூல்கள்

ரமழான் சிந்தனைகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) புனிதங்கள் பூத்துக் குலுங்கும் ரமழான் எம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. வருடா வருடம் இந்த வசந்தம் எங்கள் வாசல் நோக்கி வந்து செல்கின்றது. இந்த வசந்தத்தினால் எமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய முக்கியமான ஒரு வினாவாகும். இந்தக் கோணத்தில் சில சிந்தனைகளை எனதும் உங்களதும் உள்ளத்துக்கு உணவாக, உரமாக இங்கே …

Read More »

கழிவுகளால் நேரும் அழிவுகள்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ஆசிரியர் பக்கம் உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி …

Read More »

[e-Book] தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நபிமொழிகள்

بسم الله الرحمن الرحيم தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நபிமொழிகள்  தமிழில்: எம். அஹ்மத் அப்பாஸி அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் முன்னுரை அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் ஏக நாயன் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். இறுதிமுடிவு இறையச்சம் உள்ளோருக்கே. சாந்தியும் சமாதானமும் நபிமார்கள் ரஸூல்மார்கள் அனைவருக்கும் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மற்றும் மறுமை வரை அவர்களைத் துயரும் அனைவர் மீதும் உண்டாவதாக. இஸ்லாத்தில் …

Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) — ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ …

Read More »

பைபிளில் முஹம்மத் (07) – இயேசு அறிவித்த தேற்றவாளர்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) — இயேசு அறிவித்த தேற்றவாளர் ‘ஒரு இறைத்தூதர் வருவார், அவர் தன்னை விட மகிமை மிக்கவராக இருப்பார்ளூ அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழி நடாத்துவார்ளூ அவரது போதனை முழு மனித சமூகத்துக்குமுரியதாக இருக்கும். அவரது போதனை மாற்றப்பட மாட்டாது. உலகம் உள்ளளவும் பின்பற்றத்தக்க வழிகாட்டலாக அது இருக்கும். அவர் வெறுமனே போதனை செய்பவராக மட்டும் இல்லாமல் …

Read More »

ஜனாஸா தொழுகை

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — எல்லாம் வல்ல ஏக வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும். இறுதித் தூதர் முஹம்மத் நபி(ச) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் என்றென்றும் உண்டாவதாக! ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவனுக்குப் பிரார்த்தனை செய்யும் முகமாக ஏனைய முஸ்லிம்களால் தொழப்படும் தொழுகைக்கே ஜனாஸா தொழுகை என்று கூறப்படும். இந்தத் தொழுகை பர்ழு கிபாயாவாகும். சிலர் செய்தால் அடுத்தவர் மீதுள்ள பொறுப்பு …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 25 – தொழுகையை சுருக்கித் தொழுதல்

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — சென்ற இதழில் பயணி சுருக்கித் தொழுவதுதான் சிறந்தது. நவீன கால வசதி வாய்ப்புக்களைக் காரணம் காட்டி தொழுகையை சுருக்குவதைத் தவிர்ப்பது தவறானது என்பதை அவதானித்தோம். பயணி முழுமையாகத் தொழும் சந்தர்ப்பம்: பயணம் செய்யக் கூடியவர் ஊர்வாசிகளைப் பின்பற்றித் தொழ நேர்ந்தால் அவர் முழுமையாகவே தொழ வேண்டும். தொழுகையின் ஆரம்பத்தில் அல்லது இறுதி அத்தஹிய்யாத்தில் இணைந்தால் கூட அவர் எழுந்து …

Read More »

வறிய நாடுகளை வாட்டும் டெங்கு

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — ஆசிரியர் பக்கம் வறிய நாடுகளை வாட்டும் டெங்கு வரண்ட மற்றும் உலர் வெப்ப வலய நாடுகளை டெங்கு அபாயம் அச்சுறுத்தி வருகின்றது. டெங்குக் காய்ச்சல் (னுநபெரந குநஎநச) எலும்பை முறிக்கும் காய்ச்சல் (டீசநயம டீழசn குநஎநச) என்றெல்லாம் இதுஅழைக்கப்படும். இந்நோய் ஆரம்பத்தில் உயிர் கொல்லி நோயாக இலங்கையில் பார்க்கப்பட்டது. பின்னர் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் மலேரியாக் காய்ச்சல் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 23 (மழை வேண்டித் தொழுகை)

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) — முன்னைய இதழின் தொடர்ச்சி…. தொழுகை: மழை வேண்டித் தொழுகை இரண்டு ரக்அத்துக்களையுடையது. இதில் இமாம் கிராஅத்தை சப்தமாக ஓதுவார். குத்பா நிகழ்த்தப்படும். நபி (ச) அவர்கள் பெருநாள் தொழுகை போன்று தொழுதார்கள் என ஹதீஸ்கள் இடம்பெறுகின்றன. எனவே, மழை வேண்டித் தொழுகையிலும் பெருநாள் தொழுகை போன்று மேலதிகத் தக்பீர்கள் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை அதிகமான உலமாக்கள் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – 21 (மழை வேண்டித் தொழுகை)

பிக்ஹுல் இஸ்லாம் – 21 ஸலாதுல் இஸ்திஸ்கா (மழை வேண்டித் தொழுகை) வரட்சியின் போது அல்லாஹ்விடம் மழையை வேண்டுவதற்காகத் தொழப்படும் தொழுகையே மழைவேண்டித் தொழுகை என அழைக்கப்படும். வரட்சியின் போது மக்கள், உயிரினங்கள், பயிர்-பச்சைகள் நீரின்றி வாடும் போது மழை வேண்டித் தொழுவது சுன்னா என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்த நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால், தொழும் முறை, அதனுடன் தொடர்புபட்ட மற்றும் பல விடயங்களில் அபிப்பிராய பேதங்கள் திகழ்கின்றன. …

Read More »