Featured Posts
Home » சிறுவர் பகுதி (page 2)

சிறுவர் பகுதி

ஈஸா நபியும்… அற்புதங்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-38]

ஈஸா(அலை) அவர்கள் தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர். அவரது தாயார் அன்னை மரியம்(அலை) அவர்கள் கற்பொழுக்கம் மிக்கவர்கள், இறை நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் காட்டும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதராவார். அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பும்போது அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அற்புதங்கள் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையும். அந்த அற்புதங்களை அவர்கள் நினைக்கும் போதெல்லாம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் …

Read More »

சுலைமான் நபியும்… சாதுர்யமான தீர்ப்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-37]

தாவூத் நபியின் மகன்தான் சுலைமான் நபியாவார். இவர்கள் இருவரும் நபியாகவும் மன்னர்களாகவும் இருந்தனர். இவர்கள் மன்னர்கள் என்பதால் புதுப்புதுப் பிரச்சினைகள் இவர்களிடம் வருவதுண்டு. இவர்களில் சுலைமான் நபி மிகவும் நுட்பமாக, பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு கூறுபவராக இருந்தார்கள். இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். ஒரே நேரத்தில் இரு சகோதரிகளுக்கு குழந்தைகள் கிடைத்தன. அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டது. இருக்கும் குழந்தைக்கு இருவரும் உரிமை …

Read More »

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-36]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35] அந்தக் கொடுங்கோல் அரசனின் அரச சபையில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவனுக்கும் செய்தி எட்டியது. அவன் நிறைய பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்ட சிறுவனிடம் வந்தான். பொருட்களைக் காட்டி, “நீ என் கண்ணைக் குணமாக்கினால், இத்தனைப் பரிசுப் பொருட்களையும் உனக்குத் தருவேன்” எனக் கூறினான். அதற்கு சிறுவன், “என்னால் எவருடைய நோயையும் குணப்படுத்த முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நோய் நீக்க …

Read More »

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள் என்றால் யார் என்று தெரியுமா? அவர்கள் ஏன் அழிக்கப்பட்டார்கள் எனத் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம். கிடங்கு என்பது நெருப்புக் கிடங்காகும். அல்குர்ஆனில் சூறா ‘அல்புரூஜ் என்றறொரு (85) அத்தியாயம் உள்ளது. அதில் அல்லாஹுத்தஆலா இந்த வரலாற்றை சுருக்கமாகக் கூறுகின்றான். நபி(ஸல்) அவர்கள் அந்த சம்பவத்தை விவரித்துக் கூறுகின்றார்கள். வாருங்கள் அந்த வரலாற்றை வாசிப்போம். முன் ஒரு காலத்தில் கொடுங்கோல் அரசன் (ஒரு ஊரை …

Read More »

அல்குர்ஆன் கூறும் உண்மை கதைகள் [ஸுரத்துல் பகரா] | The True Stories from Quran

அல்குர்ஆன் கூறும் உண்மை கதைகள் | The True Stories from Quran in Tamil 1. ஸுரத்துல் பகரா அத்தியாயத்தில் இடம்பெற்ற வரலாற்றுக் கதைகள் அஷ்ஷைக். அஸ்ஹர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our …

Read More »

அடித்துக் கொன்றவர்கள், அழிக்கப்பட்டனர்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-34]

அடித்துக் கொன்றவர்கள் அழிக்கப்பட்டனர் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊருக்கு அல்லாஹ் மூன்று தூதர்களை அனுப்பினான். அந்த ஊர் மக்கள் அல்லாஹ்வின் அருளுக்குத் தகுதியானவர்களாக இருக்கவில்லை. அழிந்து போனார்கள்! ஆம் ‘அன்தாக்கியா’ எனும் ஊர் மக்கள் அறியாமையிலும் சிலை வணக்கத்திலும் மூழ்கியிருந்தனர். அங்கே அநியாயமான ஒரு ஆட்சியும் இருந்தது. அந்த ஊரில் ‘ஹபீப்’ என்ற ஒருவர் இருந்தார். அவர் சிலை வணக்கத்தை வெறுத்தார். மூட நம்பிக்கைகளை மறுத்தார். ஆனால் தனிமரம் தோப்பாகாதே! …

Read More »

நூஹ் நபியும்… கப்பலும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-33]

நூஹ் நபியும்… கப்பலும்… ஆதம் நபி காலத்தில் மக்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வந்தனர். பல தெய்வ நம்பிக்கை அப்போது இருக்கவில்லை. சிலை வணக்கமும் இருக்கவில்லை. அந்த மக்களில் மிகச்சிறந்த சிலர் இருந்தனர். அவர்கள் இறந்த பின்னர் அவர்கள் மீது பற்றுக் கொண்ட மக்கள் அவர்களின் மண்ணறைகளில் சில அடையாளங்களை வைத்தனர். பிற்பட்ட காலத்தில் வந்த மக்கள் அந்த கப்ருகளில் ஏதோ விசேசம் இருப்பதாக எண்ணி அந்தகல்லறைகளை தரிசித்தனர். அங்கே …

Read More »

கடல் பிளந்த அதிசயம்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-32]

இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களது விடுதலைக்காக மூஸா நபி போராடினார். பிர்அவ்ன் இஸ்ரவேல் சமூகத்திற்கு விடுதலைக் கொடுக்கவும் இல்லை. அவர்களை நாட்டை விட்டும் வெளியே செல்ல அனுமதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் மூஸா நபி தமது தாயகப் பூமியான பலஸ்தீனத்திற்கு இஸ்ரவேல் சமூகத்தை அழைத்துக் கொண்டு இரவில் பயணித்தார். அவர்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பயணித்தனர். ஒருநாள் அதிகாலை வேளை மூஸா நபியும் அவர்களது …

Read More »

சிலைகளை உடைத்த இப்ராஹீம் நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-31]

இப்ராஹீம் நபி ஒரு பூசாரி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தையின் பெயர் ஆசார் என குர்ஆன் கூறுகின்றது. அவர் சிலைகளுக்கு வழிபாடு செய்பவராகவும், சிலைகளைச் செய்து வியாபாரம் செய்பவராகவும் இருந்தார். இப்ராஹீம் நபிக்கு இளம் பருவம் தொட்டே சிலை வணக்கத்தில் நம்பிக்கையும் இருக்கவில்லை, நாட்டமும் இருக்கவில்லை. நாமே சிலையைச் செய்துவிட்டு அதை நாமே தெய்வம் என்று எப்படி நம்ப முடியும்? இந்த சிலைகள் பேசாது! பேசுவதைக் கேட்காது! கேட்டதைத் …

Read More »

மூஸா நபியும் இரு பெண்களும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-30]

பிர்அவ்னிடமிருந்து தப்புவதற்காக மூஸாநபி ஊரை விட்டு ஓடினார். இறுதியில் அவர் ‘மதியன்’ பிரதேசத்தை அடைந்தார். அந்த இடத்தில் இடையர்கள் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்கள் தமது ஆடுகளை வைத்துக்கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தனர். பெண்கள் இருவர் இருக்க இந்த இளைஞர்கள் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருப்பது மூஸா நபிக்குப் பிடிக்கவில்லை. அப்போது அவர்கள் அந்த இரு பெண்களிடமும் “என்ன செய்தி?” …

Read More »