Featured Posts
Home » பொதுவானவை » நிகழ்வுகள் (page 6)

நிகழ்வுகள்

அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் – ஆசியாவின் மிகப்பெரிய பிரச்சினை

-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்- இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மிகவும் பூதாகரமாக உருவெடுத்து நாட்டின் சுபீட்சத்தையும் இளம் சிறார்களின் எதிர்காலத்தையும் நாசமாக்கி விடுமோ என்ற அளவுக்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தினசரி பத்திரிகையில் ஒரு செய்தி …

Read More »

சரிந்து வரும் சமூக மரியாதை

– S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ், இலங்கை ஒரு சமூகம் குறித்து பிற சமூக மக்களிடம் உயர்வான எண்ணங்கள் இருக்க வேண்டும். இது ஒரு நல்ல சமூகம் என்ற மதிப்பும் மரியாதையும் இருந்தால் அந்த சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் மரியாதையுடன் நோக்கப்படுவான். இல்லாத போது கீழ்த்தரமான, தப்பான பார்வையைத் தவிர்க்க முடியாது. இந்த அடிப்படையில் சமுதாய மரியாதையைச் சிதைப்பது நம்மை நாமே தாழ்த்திக் …

Read More »

வரலாற்று நிகழ்வு – அலி (ரழி) அவர்களின் படுகொலை?

இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற சோகமான நிகழ்வுகளில் ஒன்றான ஹவாரிஜ்களின் வரம்புமீறிய செயல் ஹிஜ்ரி 40ல் ஆட்சியாளர்களை கொலை செய்வது. முக்கியமான மூன்று ஸஹாபாக்களை கொலை செய்வதற்கான திட்டம். அலி (ரழி) கொலை செய்தவன் யார்? எதற்காக எப்படி கொலைசெய்தான்? அலி (ரழி) அவர்களின் கொலையைப்பற்றி நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு. சிரியா-வின் ஆட்சியாளர் முஆவியா (ரழி) அவர்கள் எப்படி தப்பினார்கள்? எகிப்தின் ஆட்சியாளர் அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் …

Read More »

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் பொறுப்பு?

-உண்மை உதயம் மாதஇதழ்- 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டில் சுமார் இரண்டரை வருடங்களாக முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான இன, மத வாதப் பிரச்சாரத்தை BBS, சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களது இனவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள் மூலம் பல பள்ளிவாயில்கள், முஸ்லிம்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு வந்தன. அனுராதபுர தர்கா உடைப்பு முதல் தர்கா நகர், …

Read More »

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம்கள் அழிக்கப்பட்டார்கள்

இலங்கையில் அழுத்கம பகுதியில் நடந்த கலவரம் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம்கள் அழிக்கப்பட்டார்கள் -எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி- இலங்கையில் அழுத்தகம எனும் பகுதியில் முஸ்லிம்களுக்கெதிராக 15.06.2014 அன்று நடாத்தப்பட்ட இனக்கலவம் உலக ஊடகங்களின் கவனத்தை பெற்றது. பல நாடுகளில் இந்த இனப் படுகொலைக் கெதிராக பாரிய ஆரப்பாட்டங்களும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. முஸ்லிம்களின் இருப்புக்கெதிராக பௌத்த மத கடும் போக்குடைய இனவாத குழுக்கள் பயங்கரமாக செயற்பட்டதன் விளைவாக இந்த …

Read More »

அளுத்கம மற்றும் பேருவளை வாழ் முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தின் ஆவனப் பதிவு

2014.06.15 அன்று இலங்கையில் நடந்த அளுத்கம மற்றும் பேருவளை வாழ் முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தின் ஆவனப் பதிவு www.tmclivetelecast.com

Read More »

இலங்கையிலும் இஸ்லாமோ போபியா

– அஷ்ஷெய்க் அன்வர் இஸ்மாயீல் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம் – இன்று இஸ்லாமிய உலகிலும் மேற்கிலும் ஏற்பட்டிருக்கும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் வேகமான அலைகள் உலக மக்களை அதனை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. குறிப்பாக மேற்குலகில் மிக வேகமாக மனித உள்ளங்களை வசீகரித்து வரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியிருப்பது அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களையும் விரோதப் போக்காளர்களையும் ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.

Read More »

இலங்கை இனவாத தாக்குதலுக்குள்ளான எமது உறவுகளுக்காக..

கடந்த 15.06.2014 அன்று களுத்துறை மாவட்டத்தின் அழுத்கம நகரில் நடைபெற்ற பொதுபல சேனா எனும் பௌத்த பயங்கரவாத அமைப்பின் இனவாத மாநாட்டையடுத்து இடம் பெற்ற அவ்வமைப்பின் ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறைகளால் அழுத்கம, பேருவளை, வெலிப்பன்ன மற்றும் அருகாமையிலுள்ள பிரதேசங்களிலுள்ள சுமார் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, பத்துக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு, நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகாயமுற்றதோடு முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கோடிக்கணக்கான சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு அனைத்தையும் இழந்து சொந்த …

Read More »

ஜூன் 20 – உலக அகதிகள் தினம், ஓர் இஸ்லாமியப் பார்வை

அஷ்ஷெய்க் MI அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- இன்று உலகளாவியரீதியில் சில நபர்களையும் சம்பவங்களையும் நினைவுகூறும் முகமாக விஷேட தினங்கள் நிர்ணயிக்கப் பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடைமுறையில் உள்ள சர்வதேச அகதிகள் தினமானது 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி அகதிகளுக்கான தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டது. இத்தினத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் அகதிகளை நினைவுகூறும் …

Read More »

முகப்புத்தகமும் முஸ்லிம்களும்

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகவே இணையத்தின் (Internet) தோற்றமும் அதன் அசுரவளர்ச்சியும் கருதப்படுகின்றது. வாலிபனாயினும் சரி வயோதிபராயினும் சரி மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஓரு சாதனமாக இணையம் விளங்குகின்றது.

Read More »