மனிதனின் முதல் தேவை உணவுதான் என்பதையும், அந்த உணவைப் பெற்றுக் கொள்வதற்கான வழியை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கின்றான் என்பதையும் சென்ற தொடரில் பார்த்தோம். எந்த உயிரினமும் தம் உணவைத் தாமே சுமந்துகொண்டு திரிவதில்லை! மாறாக மனிதர்களுக்கும் இன்னும் பிற உயிரினங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கின்றான் என்பதாக அல்குர்ஆன்:-29:60 வசனம் கூறுகின்றது. இதன் விளக்கத்தை அறிவதற்கு முன் இதற்கு முன்னுள்ள நான்கு வசனங்களின் விளக்கத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். அதாவது அல்குர்ஆன் 29:56,57,58,59,60. ஆகிய ஐந்து வசனங்களுக்கும் பின்னணியில் முக்கியமான …
Read More »