Featured Posts

ஹமாஸ் வெற்றியும் ஊடகங்களின் ஒப்பாரியும்

அடைமழையினால் தனது வீட்டை இழந்து தெருவில் நிர்க்கதியாக நிற்பவரை நீங்கள் மனிதாபிமானத்தோடு தனது குடைக்குள் அழைத்துக் கொண்டு மழையிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறீர்கள். சிறிது நேரம் கழித்து அவர் உங்கள் குடையைப் பிடுங்கிக் கொண்டு உங்களை மழையில் நனைய விட்டால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்? அவசரமாக கடிதத்தை அனுப்ப வந்தவர், பெறுநரின் முகவரியை எழுத மறந்து விட்டார். உடனே அருகிலிருக்கும் உங்கள் பேனாவை இரவல் வாங்கி அதனை எழுதி போஸ்ட் …

Read More »

குஜராத் ‘நினைவுத் துயரங்கள்’ 4-ம் ஆண்டு

நினைவுத் துயரம் – குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை எதிரே வருகிறது பிப்ரவரி. நான்கு ஆண்டுகளாகியும் கிஞ்சிற்றும் மறக்க முடியாத கொடூரத் துயரங்கள், கண்களை விட்டு அகல மறுக்கும் வன் செயல்கள், ரத்த வாடைகள், சரியாகச் சொல்வதென்றால் பிப்ரவரி 28, 2002 அன்று தான் குஜராத்தில் முஸ்லிம்கள் கூட்டங் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் தொடங்கியது. அதற்கு முந்தைய நாள்தான் பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் ரயில் எரிந்த சம்பவம் …

Read More »

கோர்ட்டுக்கு வந்த ஒட்டகம்!

ஒட்டகம் குர்பானிக் கொடுக்கபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல? வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடுத்தவர் சொன்ன காரணங்கள் நகைப்பிற்குறியவையாக இருந்ததோடு உள்நோக்கமும் உடையதாகும். வழக்கின் முக்கிய அம்சமாக ஒட்டகங்கள் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பலியிடுவதற்காக வெகுதொலைவு நடத்திக் கொண்டு வரப்படுகின்றன. இக்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேரளாவில் ஒட்டகம் பலியிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதைப் போல் தமிழ்நாட்டிலும் தடை செய்ய வேண்டும் என்று …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (8)

இரண்டாவது கட்டம்: முடியாட்சியும் விளைவுகளும்இஸ்லாமிய வரலாற்றில் முதற்கட்டத்தில் இஸ்லாம் விரிந்து பரந்தது. நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளில் இஸ்லாம் உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்ந்தது. அத்துடன் பெருந்தொகையான மக்களும் இஸ்லாத்தின் கொடியின் கீழ் ஒன்று திரண்டனர். இஸ்லாத்தின் முதற்கட்டத்தின் பிரதிநிதிகளாக அமைந்தவர்கள், இஸ்லாத்தின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து அதனைத் தம் சொல்லிலும் செயலிலும் எடுத்துக் காட்டியவர்களாவர். இம்மனிதப் புனிதர்களின் உயர் பண்பாலும், பண்பட்ட நடத்தையாலும் கவரப்பட்டு …

Read More »

ஓதிப் பார்த்தல்

ஷிர்க் இடம்பெற வில்லையானால் ஓதி பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இணை வைத்தலின் ஏதாவதொரு அம்சம் கலந்து விட்டால் கூட அத்தகைய ஓதிப்பார்த்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக் கொண்டு காவல் தேடி ஓதிப்பார்த்தலும் விலக்கப்பட்டுள்ளது.

Read More »

காந்திஜியின் கடைசி வார்த்தைகள்

காந்தியின் காரியதரிசியாக பணியாற்றி பிறகு இலண்டனில் தொழில் செய்த திரு.வெங்கட் ராமன் கல்யாணம் அவர்கள் சுமார் நாண்கு ஆண்டுகள் காந்தியுடன் பணியாற்றியுள்ளார். காந்தி சுடப்பட்ட கடைசி நிமிடம் வரை அருகில் இருந்தவர், “காந்தி, கடைசியாக ஹே ராம்!” என்று சொல்லவில்லை என்றதாக மலர் மன்னன் தனது கட்டுரையில் சொல்லியுள்ளார். “காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே …

Read More »

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (7)

இஸ்லாத்தின் வெற்றியின் மர்மம் எண்ணிலடங்கா இடர்பாடுகளுக்கு மத்தியில் முஸ்லிம் படைகள் அடைந்த பெரும் வெற்றி கண்டு அக்காலத்தில் அவற்றை அவதானித்தவர்கள் வியப்படைந்தனர். ஒரு சிறு படை, சிறந்த ஆயுதம் கொண்ட பெரும் படைகளை எப்படி துவம்சம் செய்ய முடிந்தது என்பது அவர்களுக்கு விளங்க முடியாத புதிராக இருந்தது. அவர்கள் முஸ்லிம் படையின் ஆள் பலத்தை மட்டுமே கருத்தில் கொண்டனர். அதனால் தான் அவர்கள் திகைப்படைந்தனர். முஸ்லிம் படைகளின் உடல் பலத்துக்கு …

Read More »

துற்குறி

துற்குறி என்பது அபசகுனமாகும். அல்லாஹ் கூறுகிறான்: “அவர்களுக்கு ஒரு நன்மை வந்து விட்டால் இது எங்களுக்கு வரவேண்டியதுதான் என்று கூறுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டாலோ மூஸாவையும் அவர்களுடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாகக் கருதுவார்கள்” (7:131) அரபுகள் பயணம் மேற்கொள்ள அல்லது வேறு ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் ஒரு பறவையைப் பிடித்து பறக்க விடுவார்கள். அது வலது பக்கமாகப் பறந்தால் அதை நற்குறியாகக் கருதி …

Read More »

வாழும் கோட்சேக்கள்

//மலையாளம் தவிர வேறு மொழியெதுவும் தெரியாத முகமதியரான மாப்பிள்ளமார்கள்// – மலர் மன்னன் மாப்பிள்ளமார் என்று அறியப்படும் கேரள மலபாரி முஸ்லிம்கள் எகிப்துடனும், ரஷ்யாவுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். தொலை தூரதேசங்களுடன் வணிக உறவு கொண்டிருந்த மாப்பிள்ளமார்கள், மலையாளம் மட்டுமே அறிந்திருந்தார்கள் என்பது மலர் மன்னனின் அறியாமையா? அல்லது வரலாற்றைத் திரிக்கும் அவசரத்தில் தன்னையும் அறியாமல் அவ்வாறு குறிப்பிட்டாரா? என்று தெரியவில்லை. அரேபியர்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பால் இஸ்லாத்தில் இணைந்த …

Read More »

மினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்? (Mina Stampede 2006)

கடந்த 12-ந்தேதி ஜனவரி 2006 (துல்ஹஜ் பிறை 12) மதியம் 12.30லிருந்து 1.30க்கு இடைப்பட்ட நேரத்தில் மினாவில் கூட்ட நெரிசலில் நசுங்கி இறந்த 363 பேர்களின் இறப்புச் செய்தி பலரை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. ஊடகங்களால் மேம்போக்காக பார்க்கப்படும் இந்நிகழ்ச்சி மற்றும் அதனை பிரதிபலிக்கும் மக்களின் மனநிலை இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டதோடு, இதுபோன்ற துயர சம்பவம் இனிமேலும் நடவாமல் இருக்க ஒரு துரும்பையாவது நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதுகிறேன். …

Read More »