Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » பொய் வராதபடி பேச்சில் அவதானம் தேவை! [உங்கள் சிந்தனைக்கு… – 021]

பொய் வராதபடி பேச்சில் அவதானம் தேவை! [உங்கள் சிந்தனைக்கு… – 021]

இமாம் அபூ ரவ்ஹ், ஹாதம் பின் யூசுப் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
நான் புfழைல் பின் இயாழ் (ரஹ்) அவர்களின் வாசல் படி சென்று, அவருக்கு சலாம் கூறி, “அலியின் தந்தை (புfழைல்) அவர்களே! என்னிடம் ஐந்து நபிமொழிகள் இருக்கின்றன; (உங்களிடம் உறுதிப்படுத்தி எழுதிக்கொள்வதற்காக) நீங்கள் அனுமதித்தால் அவற்றை உங்களுக்கு வாசித்துக் காட்டுவேன்!” என்று சொல்லி (அவர் அனுமதிக்க) வாசித்துக் காட்டினேன். ஆனால் அதுவோ ஆறு நபிமொழிகளாக இருந்தன. உடனே என்னிடம் அவர்கள், “அடச் சீ; எழுந்து விடு மகனே! (முதலில்) உண்மை பேசக் கற்றுக் கொள்; பின்னர், நபிமொழியை நீ எழுதிக்கொள்!” என எனக்குக் கூறினார்கள்.
{ நூல்: ‘தாரீஹு திமிஷ்க்’ லிப்னி அசாகிர் , 48/430 }

قال أبو روح حاتم بن يوسف رحمه الله تعالى:-
أتيت باب الفضيل بن عياض فسلّمت عليه، فقلت: “يا أبا علي! معي خمسة أحاديث إن تأذن لي فأقرأ عليك، فقرأت؛ فإذا هو ستة! “
فقال لي: ” أف؛ قم يا بني! تعلّم الصدق، ثم أكتب الحديث “.
{تاريخ دمشق لابن عساكر ، ٤٨/٤٣٠ }

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) அவர்கள், “உண்மையாளர்களிடம் அவர்களது உண்மையைப் பற்றி அவன் விசாரணை செய்வதற்காக (உறுதிமொழி எடுத்தான்)”(அல்குர்ஆன், 33: 08) என்ற இவ்வசனத்திற்கு இவ்வாறு தனது கருத்தைப் பதிவு செய்கிறார்கள்:-

“உண்மையாளர்கள், அவர்களது உண்மை குறித்து வினவப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றிருக்குமாக இருந்தால், பொய்யர்களின் நிலைமை குறித்து என்னதான் நினைத்துப் பார்க்க இருக்கிறது?!”

{ நூல்: ‘இஆஸதுல் லஹ்பாfன்’, 01/83 }

قال تعالى: « ليسأل الصادقين عن صدقهم »
قال العلامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-
[ فإذا سئل الصادقون وحوسبوا على صدقهم، فما الظن بالكاذبين؟! ]
{ إغاثة اللهفان، ١/٨٣ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *