Featured Posts
Home » பர்சானா றியாஸ் (page 3)

பர்சானா றியாஸ்

கரும்பு தின்னக் கூலியா…

உறவினரின் வீட்டு விசேசம் ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த அந்த வயதான பெண்ணும் நானும் குசலம் விசாரித்துக் கொண்டோம். அவரது பேச்சில் எப்போதும் விரக்தி கலந்திருக்கும். இளவயதிலேயே கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக இருந்து தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி தற்போது பேரப்பிள்ளைகள் கண்டுவிட்ட நிலைமையிலும்கூட கடந்தகால வடுக்களால் நொந்து போனவர். நம்பிக்கையானவர்களிடம் முறையிடுவதால் தன் மனப் பாரம் குறையும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். அந்தவகையில் என்னுடனான அன்றையச் சந்திப்பும் …

Read More »

காவோலைகள்

உங்களின் தோல் சுருக்கங்களில் மறைந்து கிடக்கின்றன வாழும் யுக்திகள் அந்தக் கூன்விழுந்த முதுகில்தான் எம் வாழ்க்கை ஒத்திகை பார்க்கிறது உங்களது அனுபவ நரைகள் எமது குறைகளைச் சிரைக்கும் கத்தி அந்த விரல்கள் பட்ட ஊன்றுகோலின் சிராய்ப்பும் எங்களுக்கு ஆசான் பேசுங்கள் அது எங்கள் வரலாறு இன்னும் பேசுங்கள் அது உங்கள் கடந்தகால வலி இன்னும் இன்னும் பேசுங்கள் அதுவே எமக்கு மருந்து உங்களுக்காய் தியாகித்த பேரூந்தின் இருக்கையில் கிடைக்கிறது ஓராயிரம் …

Read More »

அன்புள்ள வேட்பாளருக்கு!

உரோமர் தகர்த்தெறிந்த உஸ்மானிய பேரரசு வேண்டாம் மங்கோலியர் படையெடுத்த அப்பாசியர் ஆட்சியும் வேண்டாம் மார்க்கத்தின் பெயரால் மரணமும் இனத்தின் பெயரால் இயலாமையும் இக்கணமே முடிய வேண்டும் அது உங்கள்ட வரவால் வேண்டும் இன்னும், தலைமைக்குத் தகுதி வேண்டும் தர்க்கங்கள் தவிர்க்க வேண்டும் தார்மீகம் கொள்கையாகி அதில் ஆன்மீகம் ஜொலிக்க வேண்டும் எதிரி பலம் உணர வேண்டும் எதிரி வாழ்வியலும் நீங்களறிய வேண்டும் சுயவிசாரணை செய்தேனும் உங்கள் பலவீனம் போக்க வேண்டும் …

Read More »

வீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா?

சமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது. அதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை. ஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீதியாக எவ்வாறு நோக்குகிறார்கள்? என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. …

Read More »

சிறிய தியாகம்தான்

வீட்டின் மேலதிகச் செலவை ஈடு செய்வதற்காக நகையொன்றை அடகு வைப்பது பற்றி கணவன், மனைவிக்குள் நடந்த உரையாடலைச் செவியுற்ற அவர்களது ஒன்பது வயது மகன் “இல்லம்மா… அடகு வைக்காதீங்க… அது வட்டி…” என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான். ஏற்கெனவே ஜும்ஆவொன்றில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றினை செவிமடுத்ததன் விளைவாகத்தான் மகன் இவ்வாறு பேசுகிறான், எனக்கூறி உள்ளூர சந்தோசப்பட்ட இருவரும் அவனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவ்வெண்ணத்தை கைவிட்டார்கள். இப்போது சிறுவனுக்கு சோதனையொன்று காத்திருந்தது. ஒரு வாரமாக …

Read More »

எங்களுக்கு வெற்றியே!

காரியாலயத்தில் கடமையாற்றும் (பெரும்பான்மை)மாற்றுமத உத்தியோகத்தர்கள் வழமைபோன்று அன்றும் முகமனுடன் என்னைக் கடந்து சென்றார்கள். அதற்கு முதல்நாள் நடைபெற்றிருந்த பேரினவாதக் கலவரத்தினால் ஏற்பட்ட பதற்றமும் கவலையும் சேர்ந்து செயற்கையானதொரு புன்னகையுடன் எனது பதில் வெளிப்பட்டது. எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்கும்தான். பதற்ற நிலைமை என்பதால் மாற்றுமத ஊர்களிலுள்ள காரியாலயங்களுக்குப் போக வேண்டிய முஸ்லிம் உத்தியோகத்தர்கள் அங்கே போகத் தயங்கிய அதேவேளை, முஸ்லிம்கள் செறிந்த எமது ஊர்க் காரியாலயத்திற்குச் சமுகமளித்த மாற்றுமத உத்தியோகத்தர்கள் …

Read More »

இதுவும் தாய்மைதான்

ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்காக என்னென்ன தியாகங்களை செய்கிறார் என்பதை பற்பல கோணங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அண்மையில் தந்தை ஒருவரின் செயல் என் மனதைத்தொட்டுப்போனது. அவர்கள் குடும்ப சகிதம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவரது பிள்ளைகள் இருவருடன் எனது சகோதரியின் மகனும் தனது விளையாட்டுப் பொருட்களுடன் உட்கார்ந்து விளையாடத் தொடங்கியபோது ஆரம்பித்தது பிரச்சினை. பொருட்களின் சொந்தக்காரன் என்றவகையில் எங்கள் வீட்டுப் பிள்ளை அதிகம் உரிமை எடுப்பதும், அதைத் தொட்டு விளையாடக்கூட …

Read More »

பயனாளிகளும் பங்கீடுகளும்

அரசாங்கத்தினால் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட சில அத்தியவசியப் பொருட்கள் வருமானம் குறைந்த பயனாளிகளுக்கிடையில் பங்கிடப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அது. அந்தச் சன சந்தடிக்குள்ளும் உள் நுழைகிறேன். ஒரு உரையாடல் என் காதில் விழுகிறது. முதலாமவர்- “வாகனமும் வைத்துக் கொண்டு உழைக்கிறான்… அந்தாளுக்கு எப்படி சேர் நிவாரணம் கொடுப்பீங்க…” இரண்டாமவர்- “வாகனம் என்கிட்ட இருக்குறது உண்மைதான்… ஆனா அது என்ட பெயர்ல இல்லயே…” ஒரு தெனாவெட்டும் சட்டம் சார்ந்ததுமாய் வெளிப்படுகிறது இரண்டாமவரின் பேச்சு. …

Read More »

மரணத்தை எழுதுகிறேன்

மரணத்தைக் குசலம் விசாரித்து, அதனுடனேயே கண்ணயர்தல் எனக்கு பழகியதொன்று இருப்பினும், புதுப்பொழுதை புலரவிட்டு இன்றைக்கும் வாழ்ந்துபார்! என்கிறது வாழ்க்கை வாழ்க்கையுடன் தைரியமாகவே நடக்கிறேன் என் கைப்பட எழுதிய “வசிய்யத்து” கைப்பையில் இருப்பதனால் நாளை நாளை என்று நான் கொடுத்துவிட்ட வாக்குறுதிகள் நாளை என் கப்றை நெருக்க வேண்டாமென, “நாளை” களுக்கு முன்னால் “இன்சாஅல்லாஹ்” களையும் சேர்த்தே மொழிந்துள்ளேன் நான் கடனாக கொடுத்தவைகளை எங்கேனும் பொறிக்கவில்லை அழகிய கடனாக அவை என்னை …

Read More »

அந்தக் காரியாலயம்

பலவருடங்களாக சொந்த ஊரில் கடமையாற்றிய எனக்கு, வெளியூர் காரியாலயத்தில் இடமாற்றம் கிடைத்திருந்தமை, நல்லதோர் திருப்புமுனையாக அமைந்தாலும், அது சகோதரமொழிக் காரியாலயம் என்பதுதான் ஜீரணிப்பதற்குச் சற்றே கடினமாக இருந்தது. அதுவும் அங்குள்ளவர்களிடம் இருந்து அந்நியப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் வேறு ஒட்டிக் கொண்டதுடன், முற்றிலும் மாறுபட்டதொரு சூழலுக்கும் பஸ்வண்டிப் பிரயாணத்திற்கும் பழக வேண்டியும் இருந்தது. எது எப்படியோ புதுக்காரியாலயம் வந்தாயிற்று. வேறு உத்தியோகத்தர்கள், வேறுகாரியாலயம், வேறு நிருவாகம் என்று எனது உலகம் …

Read More »