பீ.ஜே. திண்ட நபித்தோழர்களின் மாமிசம்
முஹம்மத நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மரணித்தின் பின்னால் இரு கலீஃபாக்களின் கொலைகள் இந்த சமூகத்தின் முதுகில் பாய்ச்சப்பட்ட இரு கூரான அம்புகளாகும் .
அவ்விருவரில், முதலாவது நபித்தோழர் கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள்,
இரண்டாவது நபித்தோழர் நபி ஸல் அவர்களின் மருமகன் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள்.
இவ்விருவரும் நபி (ஸல்) அவர்களால் الشهيدان இரு ஷஹீத்கள் என நன்மாராயம் கூறப்பட்ட சுவனத்து வாரிசுகள்.
பீ.ஜே. திண்ட மாமிசம்?
கலீஃபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களுக்கு உம்ராவின் சட்டம் தெரியாது எனப் பொய் சொன்னதோடு அவர் தொடர்பாக வந்த செய்தியை இருட்டிப்புச் செய்தார். (பார்க்க அல்ஹாதாயா.காம் – அப்பாஸ் அலி மிஸ்க்)
உமர் பின் கத்தாப் அவர்களுக்கு தயம்மத்தின் சட்டம் தெரியாது.
கலீஃபா #உஸ்மான் பின் அஃப்பான் (ரழி) அவர்களின் வரலாறு பற்றி விமர்சனம் செய்யும் பீ.ஜே. உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சியில் அவரது குடும்பத்தினர் ஆட்சி, நிருவாகத்துறைகளில் முன்னுரிமைப்படுத்தப்படதாகவும் அதனால் மதீனாவில் நபித்தோழர்கள் கூட அவருக்கு சபோட் பண்ணவரவில்லை என்றும் உளரி இந்த இரு ஷஹீத்களின் மாமிசத்தை உண்டார். (பார்க்க பீ.ஜே பேசிய வரலாறு )
அதில் அவர் ஏன் உஸ்மான் கொல்லப்பட மாட்டார்? எனக் கேட்டு மாமனுக்கும் மச்சானுக்கும் பதவி கொடுத்தாரே அதற்காகவே கொல்லப்பட்டார் என மிகக் கேவலமாகப் பேசியுள்ளார்.
மதீனத்து அன்ஸாரிகள் நபித்தோழர்கள் பற்றி
பதவி வெறி பிடித்தவர்கள், வந்தா வா? போனாப் போகுதுண்டு சாப்பாடு கொடுத்தோம், உண்ணக் கொடுத்தோம். புகலிடம் கொடுத்தோம். இப்ப ஆட்சியப் பிடிக்க வந்திட்டாய்ங்க என்ற பொருளில்…
மேலும்… அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலாயாகும்? என்ற நிலையில் நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் ஆட்சிக்காக நபித்தோழர்கள் காத்துக் கிடந்தார்களாம்.
அம்று பின் ஆஸ் ஒரு கிரிமினல்
அலி ரழி அவர்களின் ஆட்சியில் முஆவியா (ரழி) தரப்பில் இருந்து சமரசம் பேச வந்த அம்று பின் ஆஸ் ஒரு கிரிமினல்…
கருத்தரிப்பு உறை பற்றி பற்றி அபூஹுரைரா அவர்களுக்கு தெரியுமா? பெரிய அதிசயக் கேள்வி!!!
நபித்தோழர்களை விட நாம் விளக்கசாலிகள்
இதைச் சொன்ன அண்ணன் அவர்கள் நபித்தோழர்களின் மாமிசத்தை உண்ணாதவராம், அதைச் சுட்டிக் காட்டுவோர் வழிகெட்ட அண்ணன் மாமிசத்தை உண்ணுவோராம் என சிலர் வாதிடுவது எதைச் சொல்கின்றது?
பதிவு
✍
ரிஸ்வான் மதனி