Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » சுயநலத்திற்காக நிலைமாறி, நிறம் மாறும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 005]

சுயநலத்திற்காக நிலைமாறி, நிறம் மாறும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 005]

முஸ்லிம்களை அடக்கம் செய்யும் மையவாடியில் நாய் ஒன்றை ஒருவன் புதைத்தான். அப்போது அவனைப்பற்றி மக்கள் நீதிபதியிடம் புகார் செய்தனர். அவனை வரவழைத்த நீதிபதி, அவன் குறித்துச் சொல்லப்பட்ட செய்தியின் உண்மை நிலவரம் பற்றி வினவினார். அதற்கு

அம்மனிதன்: “ஆம்; செய்தி உண்மைதான்! இப்படிச் செய்யும்படி அந்த நாய் எனக்கு வஸிய்யத் செய்திருந்தது; அதை நான் நிறைவேற்றினேன்!” என்றான். இதைக்கேட்ட

நீதிபதி: “உனக்கு நாசம் உண்டாகட்டும்! அசுத்தமான நாய் ஒன்றை முஸ்லிம்களின் மையவாடியில் புதைத்ததன் மூலம் எம்மை நீ கேவலப்படுத்துகின்றாயா?” என்று கேட்டார். அப்போது,

அம்மனிதன்: “அந்த நாய், ஆயிரம் தீனார் தங்க நாணயங்களை நீதிபதிக்குக் கொடுக்கும்படியும் உறுதியாகவே எனக்கு வஸிய்யத் செய்திருந்தது!” என்று கூறினான். உடனே,

நீதிபதி: “இறந்து போன அந்த நாய்க்கு அல்லாஹ் அருள்புரிவானாக!” என்று பிரார்த்தித்தார்.

நீதிபதி குறித்தும், அந்த நேரத்தில் உடனடியாகவே எப்படி அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்? என்பது குறித்தும் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்! அப்போது அவர்களிடம்,

நீதிபதி: “நீங்கள் ஆச்சரியப்படாதீர்கள்; ஸாலிஹான, நல்ல இந்த நாய் பற்றி நான் ஆழமாக சிந்தனை செய்து பார்த்தேன்; அப்போது அது, குகைவாசிகளது நாயின் பரம்பரையிலிருந்து வந்தது என்பதாகக் கண்டு கொண்டேன்!” என்றார்.

இவ்வாறுதான் சில மனிதர்களும் இருக்கின்றனர். தமது ஆரம்பங்கள், முன்னைய நிலைப்பாடுகள் ஆகியவற்றில் அவர்கள் தவறாகப் பேசிவிட்டு, பின்னர் தமது விருப்பங்களுக்கும், தமது நலவுக்குமேற்ப ஆதரவாக நடந்து கொள்கின்றனர்!.
{ முகநூலில் ஒரு சகோதரர் }

يذكر أن رجلا دفن كلبا في مقبرة المسلمين، فشكاه الناس إلى القاضي، فاستدعاه القاضي وسأله عن حقيقة ما نسب إليه.
فقال الرجل: نعم؛ لقد أوصاني الكلب بذلك فنفذت وصيته!
فقال القاضي: ويحك! تدفن كلبا نجسا في مقبرة المسلمين وتستهزئ بنا؟!
فقال الرجل: وقد أوصاني الكلب أيضا أن أعطي ١٠٠٠ دينار للقاضي.
فقال القاضي: رحم الله الكلب الفقيد!
فتعجب الناس من القاضي، وكيف تغير في الحال!
فقال لهم القاضي: لا تعجبوا، فقد تأملت في أمر هذا الكلب الصالح فوجدته من نسل كلب أصحاب الكهف.
هكذا بعض الناس تتغير مبادئهم ومواقفهم فينطقون بالباطل ويدافعون عنه، حسب الرغبات وما تقتضيه مصلحتهم!.

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *