Featured Posts
Home » பொதுவானவை (page 31)

பொதுவானவை

அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளாத வெறும் புத்தகப் படிப்பு, சில நேரங்களில் ஆபத்தாகி விடும்! [உங்கள் சிந்தனைக்கு… – 035]

சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “யாருடைய ஆசிரியர் புத்தகமாக இருக்கிறதோ அவரிடம், சரியை விட தவறே அதிகமாக இருக்கும்!” என்று பழமொழியொன்று சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவம் ஒன்று இவ்வாறு கூறப்படுகிறது: அல்குர்ஆனுக்குப் பின்னர் சிறந்த நூல் என்பதாக மதிக்கப்படக்கூடிய ‘ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் நூலை ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, “الحبّة السوداء -கருஞ்சீரகம்- மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்தாகும்!”(ஹதீஸ் …

Read More »

(பீஜே ஜமாத்துடன்) விவாதம் செய்யணுமா?

பீஜே கொள்கையைச் சரிகாண்போரில் பலர், அதன் கொள்கையை எதிர்த்து நம்மைப் போன்றோர் பதிவேற்றும் போது சில சமயம்  கீழ்கண்ட குற்றச்சாட்டை முன்வைப்பதுண்டு. . “உண்மையிலேயே எங்கள் கொள்கை பிழை என்றால், எங்கள் ஜமாத்தை அணுகி, ஒரு விவாத ஒப்பந்தம் செய்து, விவாதத்தில் எமது கொள்கையைப் பிழையென்று நிரூபித்துக் காட்டுங்கள்; அடுத்த கணமே நாம் கொள்கை மாறத் தயார். அதை விடுத்து இப்படி வெறுப்பைக் கொட்டுவது போல் பதிவேற்றம் போடுவது நியாயம் …

Read More »

இஸ்லாமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் [World Environment Day]

ஜூன் மாதம் 05 ஆம் திகதி [World Environment Day] -சர்வதேச சுற்றுச் சூழல் பாதுகாப்பு- தினமாகும். மனித வாழ்வு இயந்திரமயமான பின்னர் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தினம் தினம் கேள்விக் குறியாகிக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயந்திரங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றினூடாக எமது சுற்றுப் புறச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. நாம் வாழும் எமது பூமியின் இயற்கைத் தன்மையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு …

Read More »

மனிதர்களின் இந்நிலைப்பாடு அழிவுக்கே வழிவகுக்கும்! [உங்கள் சிந்தனைக்கு… – 034]

இமாம் இப்னு குதாமா அல்மக்திஸீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “அறிந்து கொள்ளுங்கள்! மக்கள் பழிப்பார்கள் என்று பயந்ததாலும், அவர்களின் புகழ்ச்சியை விரும்பியதாலுமே மனிதர்களில் அதிகமானோர் அழிந்து போனார்கள். இவர்களின் அசைவுகள் அனைத்தும் மக்களின் திருப்திக்கு உடன்பட்டதாகவே மாறிவிட்டது. புகழை எதிர்பார்த்தும், பழிப்பைப் பயந்துமே இவ்வாறு இவர்கள் நடந்து கொள்கின்றனர். இது, அழிவுக்கு இட்டுச் செல்லும் விடயங்களில் உள்ளதாகும். இதற்குச் சிகிச்சை செய்யப்பட வேண்டியது அவசியமாகும்!” { நூல்: ‘முஹ்தஸரு மின்ஹாஜில் காஸிதீன்’, …

Read More »

இறைவிசுவாசியை உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் இஸ்திஃfபார்! [உங்கள் சிந்தனைக்கு… – 033]

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “-இஸ்திஃfபார்- எனும் பாவமன்னிப்புக் கோருதல், மனிதனை வெறுக்கப்பட்ட செயலிலிருந்து வெளியேற்றி விருப்புக்குரிய செயலுக்கு இட்டுச் செல்கிறது; குறைபாடுடைய செயலிலிருந்து பூர்த்தியான செயலுக்கு அவனைக் கொண்டு செல்கிறது; மேலும், தாழ்ந்த இடத்திலிருந்து அதை விட உயர்ந்த இடத்திற்கும், பூரணத்துவமான நிலைக்கும் மனிதனைக் கொண்டு செல்கின்றது!” { நூல்: ‘மஜ்மூஉல் fபதாவா’, 11/696 } قال شيخ الإسلام إبن تيمية رحمه الله …

Read More »

நேர்வழியை அறிந்து கொள்ள இஸ்லாம் கூறும் அறிவுரை

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய அனைத்து வழிகேடுகளும் குர்ஆன் ஹதீஸ் பெயரில் தான் உருவானது. நவீன வழிகேடுகளை விட்டு எம்மை பாதுகாத்து நேர்வழியை அறிந்து கொள்ள குர்ஆன் ஹதீஸ் படி வாழ்ந்து மரணித்த நம் முன்னோர்களை (ஸலபுஸ் ஸாலிஹீங்களை) அல்லாஹ் சிறந்த முன்னோடியாக நமக்கு ஆக்கியுள்ளான். 1400 வருட காலங்களில் சத்திய கொள்கையாக இல்லாத ஒன்று இன்று நுணுக்கமான ஆய்வுகளால் சத்தியம் ஆகிவிடாது. நமக்கு முன்னர் சத்தியத்தில் வாழ்ந்து மரணித்தவர்கள் பலர் மறுமை …

Read More »

பிழையாக புரியப்பட்டுள்ள சத்தியத்தின் அளவுகோல்கள்

1: சத்தியம் அசத்திய வாதிகளின் எதிர்ப்பை சந்திக்கும் ஆனால் எதிர்க்கப்படுகின்ற குழுக்கள் அனைத்தும் சத்தியவாதிகள் கிடையாது. ஷீஆக்கள் எதிர்க்கப்படுகின்றனர் அதனால் அவர்கள் எப்படி சத்தியவான்கள் ஆக முடியாதோ அதே போல் எதிர்க்கப்படுகின்றோம் என்பதற்காக PJ கொள்கையுடைய TNTJ -SLTJ சத்தியவாதிகள் ஆகிவிட முடியாது. 2: குறைந்த எண்ணிக்கை கொண்டோர் தான் சுவனம் நுழைவார்கள் என்பதற்காக குறைந்த எண்ணிக்கை கொண்ட குழுக்கள் அனைத்தும் அதை விளக்கம் இன்றி அளவுகோலாகக் கொண்டு தங்களை …

Read More »

ஷேக் உஸைமீன் அவர்கள் ஜஸ்ஸாஸா தொடர்பான ஹதீஸை (பீஜே மறுத்தது போன்று) மறுத்தார்களா?

ஷேக் உஸைமீன் அவர்கள் தஜ்ஜால் உயிரோடு உள்ளான் என்ற செய்தியை மறுத்துள்ளார் பீஜே யை விமர்சனம் செய்வது போல் ஷேக் உஸைமீன் அவர்களை ஸலபிகள் விமர்சனம் செய்வார்களா? என்ற கேள்வியுடன் பீஜேயின் ஹதீஸ் நிராகரிப்பு கொள்கையை நேர்வழியாக ஏற்றுள்ள சகோதரர்கள் பல இருட்டடிப்புக்களுடன் எழுதப்பட்டுள்ள ஆக்கம் ஒன்றை share பண்ணி தங்களின் பிழையான கொள்கைக்கு வலுச்சேர்க்க முனைந்துள்ளனர். அதன் உண்மை தன்மை பற்றி ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து …

Read More »

புகைத்தலைப் புதைக்க ரமளான் ஓர் அரிய சந்தர்ப்பம்! [உங்கள் சிந்தனைக்கு… – 032]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உறுதியான தீர்மானத்தை உண்மையாகவே எடுத்து, தீங்கை ஏற்படுத்தும் மோசமான இந்த புகைத்தலிலிருந்து விடுபட விரும்புபவருக்கு ரமளான் மாதம் ஓர் அரிய சந்தர்ப்பமாகும். ரமளானின் பகல் பொழுதில் புகைக்காமல் தடுத்துக்கொண்டிருந்தவருக்கு (புகைத்தலை விடுவதற்கான சிறந்த) சந்தர்ப்பமாகவே இதை நான் பார்க்கிறேன். அல்லாஹ் இவருக்கு ஆகுமாக்கி இருக்கும் உணவிலிருந்தும் பானத்திலிருந்தும் உட்கொள்வதன் மூலம் இரவிலும் இப்புகைப் பழக்கத்தை விட்டும் இவர் முடியுமானவரை விலகிவிட …

Read More »

உங்கள் பிள்ளைகள் உங்களுக்கெதிராக அல்லாஹ்வின் முன்னிலையில் வாதிடக்கூடாது! [உங்கள் சிந்தனைக்கு… – 031]

“உங்கள் மகனோ அல்லது மகளோ ஏன் அவர்களை நீங்கள் சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லவில்லை என்றோ, அல்லது எலக்ட்ரானிக் சாதனங்களை ஏன் அவர்களுக்கு நீங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்றோ, அல்லது உடற்பயிற்சி கிளப்களில் அவர்களை நீங்கள் ஏன் சேர்த்துவிடவில்லை என்றோ, அல்லது மார்க்கெட்டுகளுக்கு ஏன் அவர்களை நீங்கள் கூட்டிச்செல்லவில்லை என்றோ நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் உங்களைப் பற்றி முறைப்பாடு செய்யவேமாட்டார்கள். என்றாலும் அவர்கள், அல்லாஹ்விடம் தமது முறைப்பாடுகளை இப்படிக் …

Read More »