Featured Posts
Home » இஸ்லாம் » அழைப்புப்பணி » தாஃவா எனும் சத்தியம் பிரச்சாரத்தின் இலக்கணத்தை விளங்காத சில தாயீக்களுக்கு ஓர் விளக்கம்!

தாஃவா எனும் சத்தியம் பிரச்சாரத்தின் இலக்கணத்தை விளங்காத சில தாயீக்களுக்கு ஓர் விளக்கம்!

வெற்றியாளர்களின் இலக்கணம்:
1) கல்வி கற்றல்
2) அமல் செய்தல்
3) சத்தியத்தை போதித்தல்
4) பொறுமை காத்தல்

இந்த நான்கு நிபந்தனைகளை தான் பாக்கியவான்களின் பண்புகளாக இருக்க வேண்டும் என்று ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் கூறுகிறான்(சூரா அஸ்ர்).

அல்லாஹ் கூறும் வரிசையும் முக்கியம். கல்வியை கற்று தான் அமல் செய்ய வேண்டும் பின்பு தான் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.

இந்த வரிசையை மாற்றி செய்தாலும் முழுமையான பாக்கியவானாக முடியாது.

இதன்படி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் இருக்கும் அனைவரும் நஷ்டவாளிகள் என்று அல்லாஹ் காலத்தின் மீதே சத்தியம் செய்கிறான்.

சரி விசயத்துக்கு வருவோம்….

மூன்றாவது இலக்கணமான சத்திய பிரச்சாரத்தில் பல படித்தரங்கள் மற்றும் பகுதிகள் உள்ளன. அந்தந்த காலம் சூழ்நிலைக்கு ஏற்ப அதில் தேவைகள் கூடும் குறையும்.

உதாரணமாக ஷேய்ஹ் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் முஸ்லிம்களிடையே கொடிகட்டிப் பறந்த இணைவைப்பை அழித்து ஒழித்து மிகப்பெரும் தொண்டாற்றினார்கள். மிகப்பெரும் மாற்றத்தை அந்த காலம் அடைந்தது. வரலாறு பேசும் அளவிற்கு அவர்களின் பங்கு அபாரமானது!

♥சத்தியத்தை எடுத்துரைத்தலின் பகுதிகள்:

1⃣ இன்றைய முஸ்லிம்களிடத்திலே அறியாமையால் இருக்கும் ஷிர்க்(இணைவைப்பு) எனும் அநியாயத்தை அது நரகத்தில் சேர்க்கும் மாபெரும் பாவம் என்று எடுத்துச் சொல்லி தவ்ஹீதை(ஏகத்துவத்தை) பற்றிய கல்வியை போதிப்பது.

ஆதாரம்:
எவர் உங்களிடம் வருகிறாரே அவரை அலட்சியம் செய்யாதீர்கள்; எவன் அலட்சியம் செய்கிறானோ அவனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டாம்!
(அல்குர்ஆன்: சூரா அபஸ)

முஸ்லிம்கள் தான் இஸ்லாமிய கொள்கை மற்றும் கருத்துக்களுக்கு செவி சாய்த்து சீர்த்திருத்திக் கொள்வதற்கு மிகவும் நெருக்கமானவர்கள.

இணைவைப்பு,
பித்அத்,
மூடநம்பிக்கை,
சடங்கு சம்பிரதாயம்,
அனாச்சாரங்கள்,
வீணான காரியங்கள்,
மறுமையை பாலாக்கும் செயல்கள் என அனைத்தையும் முஸ்லிம்களிடம் அழித்து ஒழிப்பதற்காகவே இப்பிரச்சாரம் அமைய வேண்டும்.

_______

2⃣ ஏற்கனவே குஃப்ர் எனும் ஏகத்துவ நிராகரிப்பில் மூழ்கி இருக்கும் மாற்று மதத்தவர்களுக்கும், கடவுளே இல்லை என மறுக்கும் நாத்திகர்களுக்கும் அல்லாஹ் ஒருவனே அவனே வணக்கத்திற்கும் வழிபாட்டிற்கும் தகுதியானவன் என்று தவ்ஹீதை சொல்லி மக்களை இஸ்லாத்தின் பால் அழைப்பது.

ஆதாரம்:
ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர யாருமில்லை என்பதை நோக்கி மக்களை அழைப்பதே உங்களது முதல் பணியாக இருக்கட்டும்…
(அல்ஹதீஸ்)

_______

3⃣ இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய வழிகேடர்கள், இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் ஷியாக்கள் மற்றும் ஸுஃபிகளினால் ஏற்படுத்தப்பட்ட கொள்கை குழப்பங்களை மக்களுக்கு தெளிவுபடுத்துதல்.

இது மிகவும் நுணுக்கமான பகுதி. ஏனெனில் இதில் உள்ளவர்கள் போர்த்தியிருப்பது தவ்ஹீத் எனும் போர்வை!

இந்த பகுதியில் நின்று தாஃவா செய்வதற்கு மிகுந்த மார்க்க ஞானமும் இஸ்லாமிய வரலாறும் பாரம்பரியமும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

எந்த அளவுக்கென்றால் இஸ்லாத்தின் எதிரிகளான ஷியா மற்றும் ஸுஃபிகளை கூட எளிதில் இனம் கண்டுவிடலாம்.

ஆனால் வழிகேடர்களை கண்டுபிடிப்பதும் அடையாளப்படுத்துவதும் மிகவும் கடினமான ஒன்று. இதுவே தாஃவா களத்தில் மிகவும் சிக்கலான பகுதி.

வழிகேடர்களை பொருத்தவரை நபியவர்கள் ஏற்கனவே கூறிவிட்டார்கள்; மக்களை வழிகெடுப்பதற்கு நரக வாசலிலே நின்று கொண்டு அந்த கூட்டத்தை சேர்ந்த அழைப்பாளர்கள் புடித்து இழுப்பார்கள்.

உங்களையும் எச்சரிக்கிறேன் அவர்களையும் எச்சரிக்கிறேன்.
அவர்கள் பேசிட்டு போகட்டும்னு மட்டும் சும்மா இருந்துவிடாதீர்கள்; ஏனெனில் அவர்களும் நமது பாசையே பேசுவார்கள் குர்ஆன் ஹதீஸ் குர்ஆன் ஹதீஸ்.

அந்த காலத்தை நீங்கள் அடைந்தால் முஸ்லிம்களின் கூட்டமைப்பை பற்றி பிடியுங்கள்.
அது தான் ஸபீலில் முஃமினீன்(நம்பிக்கையாளர்களின் பாதை). மறுமை நாள் வரைக்கும் அந்த பாதையின் இரவும் பகலும் மிக வெண்மையானதாகவே இருக்கும்.

சுருக்கமாக கூறினால் ஸஹாபாக்கள் தான் முஸ்லிம்களில் முதன்மையானவர்கள்;
நபியின் நேரடி மாணவர்கள்;
அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்ற பாக்கியசாலிகள்;
அவர்களுக்கு எந்த கூட்டம் எதிராக செல்கிறதோ அவர்கள் தான் வழிகேடர்கள்.

உதாரணமாக:

கவாரிஜ்கள் – மார்க்கத்தை மிகவும் கடுமையாக பின்பற்றுகிறோம் என்று நபித்தோழர்களையே கொலை செய்தவர்கள்

கதரியாக்கள் – நல்லது கெட்டது அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கிறது என்று நம்புவது தான் ஈமானின் ஆறாவது பகுதி. இதை மறுப்பதுடன் நாம் செய்யும் பாவத்திற்கு விதி தான் காரணம் என்று தப்பிக்க நினைப்பவர்கள்

மூஃதஸிலாக்கள் – அல்லாஹ் ஸிஃப்பத்துக்களை வரம்பு மீறி சுயவிளக்கம் கொடுத்து அதனை மறுப்பவர்கள். விதியை மறுத்தனர். பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் மறுத்தனர்.

காதியாணிகள் – இறுதி நபித்துவம் முற்று பெறவில்லை. இறைச்செய்தி பொய்யன் மிர்ஸா குலாம் அஹமது என்பவனுக்கு வந்தது என்று இஸ்லாத்தின் அடிப்படையை ஆட்ட நினைத்த கயவர்கள். பல ஸஹீஹான நபிமொழிகளை மறுத்தவர்கள்.

இப்படி எத்தனை பட்டியல் போட்டாலும் அனைத்து வழிகேடர்களுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை நபியின்_வழிமுறையை புறக்கணித்து மறுத்திருப்பார்கள் மேலும் நபித்தோழர்களுக்கு மாற்றமாக கொள்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்.

இதுவே அடையாளம். அதனால் தான் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅ(ஸுன்னத்துடையவர்கள் & கூட்டமைப்புடையவர்கள்) என்று பெயரிடப்பட்டது.

குறிப்பு:
(கவ்ஸர் தடாகத்தில் நீரருந்த தடுக்கப்படுபவர்கள் ஸஹாபாக்கள் என்று சிலர் ஸஹாபாக்களின் வரைவிலக்கணமே தெரியாமல் பொது தளங்களில் உளறி வருகின்றனர். யார் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகவே மரணித்தார்களோ அவர்கள் மட்டும் தான் நபித்தோழர் என்ற அந்தஸ்தை பெற்றவராக ஆவார்.)

இன்றும் நபிமொழிகளை ஒரு சாரார் தமிழுகளில் இந்த கொள்கை குழப்பத்தை பெரும் அளவில் செய்து கொண்டு தான் உள்ளனர். குறிப்பாக பீஜே அதில் ஒன் அண்ட் ஒன்லி மாஸ்டராக இருக்கிறார். தற்சமயம் கூட உவைஸ் அல்கர்னி(ரஹ்) அவர்களின் சிறப்பை கூறும் நபிமொழியை தூக்கி வீசியிருக்கிறார்.

சூனியத்தால் தாக்கம் உண்டாகும் என நம்பும் அனைத்து முஸ்லிம்களும் முஷ்ரிக்கீன்கள்(மக்கா மதினா இமாம்கள் உட்பட);
கண்ணேறால் எந்த பாதிப்பும் ஏற்படாது யாராவது நம்பினால் காஃபிர்கள்;
இது போன்று இஷ்டத்திற்கு மார்க்கத்தை விளங்காமல் ஃபத்வா கொடுத்தார். இன்னும் நூற்றுக்கணக்கான ஹதீஸ்களையும் மனோஇச்சையால் மறுத்திருக்கிறார்.

இது தான் மிகப்பெரும் கொள்கை குழப்பம்…………………!!!

கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக ஏற்றப்படும் இந்த மனோஇச்சையில் ஹதீஸ் மறுப்பு பெரும் தாக்கத்தை இன்று வரைக்கும் ஏற்படுத்தி பல மக்களை வழிகெடுத்துள்ளது.

இதை பற்றி தவ்ஹீதை பேணும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் சத்தியம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இந்த மூன்றாவது பிரச்சாரம் மிக அத்தியவாசியமானதும் கஷ்டமானதுமே ஆகும்…!

சரி இப்போது நாம் இட்ட தலைப்புக்கு வருவோம்…

ஒரு சிலர் இந்த மூன்றாவது சத்தியப் பிரச்சாரம் பற்றி விளங்காமலும், இந்த தாஃவா தேவையில்லை என்பது போலவும், அமல்களை மாத்திரம் செய்து கொள்வோம் என்று கருதுகின்றனர்.

ஹதீஸ் மறுப்பு குறித்து மக்களிடையே பேச்சாலும் எழுத்தாலும் விழிப்புணர்வு கூட ஏற்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.

வெளிப்படையாகவே சொல்கின்றனர்; இந்த ஹதீஸ் மறுப்புக்கு எதிரான பிரச்சாரமெல்லாம் தேவையில்லை; எந்த பிரயோஜனமும் இல்லை.

அதற்கு பதிலாக அமல் மட்டும் செய்யுங்கள் என்று மடத்தனமாக அறிவுரையும் கூறுகின்றனர்.

அது போன்ற பிரச்சாரத்தை அவர்கள் விரும்பாததற்கு இரு காரணம்:
1) பீஜேவின் கொள்கை குழப்பத்தின் விளைவுகளை பற்றி புரிந்து கொள்ளாமை மேலும் ஹதீஸ் மறுப்பை எதிர்ப்பதில் எந்தப்பயனுமில்லை என்ற முற்போக்குச் சிந்தனை.
2) பிறமத மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது மட்டும் போதும் என்ற குறுகிய சிந்தனை.

நானறிந்த வகையில் தப்லீக் ஜமாஅத் தான் தீமைகளை கண்டால் ஒதுங்கிவிடுவார்கள்.

ஸஹாபாக்களை வெளிப்படையாக ஒருவர் திட்டுகிறார். ஆயிஷா அம்மாவின் ஒழுக்கத்தையே சந்தேகிக்கும் அளவுக்கும் & உமர் ரலி அவர்களை ஹதீஸ் மறுப்பாளர் என்று விமர்சிக்கும் அளவுக்கு ஒரு வழிகேடன் தொடர்ந்து அவதூறு கூறி வருகிறான்.

அதற்கு மறுப்பு கொடுப்பதை கூட இவர்கள் விளங்காமல் ஹதீஸ் பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்.

அப்படிப்பட்ட சில அழைப்பாளர்களுக்கு சிந்தனைகளை வளர்த்துக் காெள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
(அல்குர்ஆன் : 3:104)

அல்லாஹ் அனைவருக்கும் பரந்த மனதோடு சிந்துத்து செயல்படக்கூடியவர்களாக ஆக்கி அருள்புரிவானாக….!

ஆக்கம்:
முஷ்தாக் அஹமது பிடெக்
இஸ்லாமிய மாணவன்
98947 36434

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *