Featured Posts
Home » Tag Archives: NTF

Tag Archives: NTF

TNTJவின் திருகுதாளங்கள் – இஸ்லாமா? இயக்கமா? மாநபி வழியா? மாநில தலைமையா? குர்ஆன் ஹதீஸா? அறிஞர் குழுவா?

அன்வர்தீன், பெரம்பலூர் தமிழகத்தில் குர்ஆன் ஹதீஸை மட்டும் போதிப்பதாக சொல்லி, ஞானமில்லாமல் மனோ இச்சையின் அடிப்படையில் தவறான மார்க்கத் தீர்ப்புகளை அளித்து, முஸ்லிம்களிடையில் பிரிவினையை ஏற்படுத்தி, தானும் வழிகெட்டு அவர்களை ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றுவோரையும் வழிகெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழக இயக்கம்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். குர்ஆனுக்கு சுய விளக்கம், ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல், மனம்போன போக்கில் மார்க்க தீர்ப்புகள் என்று மார்க்கத்தில் மட்டும் இவர்கள் கைவரிசையை …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 5 – TNTJவின் ஞானசூனியங்கள்

அன்வர்தீன், பெரம்பலூர் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – TNTJவின் ஞானசூனியங்கள்.     எந்த ஒரு விவாதகளமாகட்டும், அதிலே NTF & TNTJ கூட்டத்தினர் தனித்தன்மையுடன்? இருக்க வேண்டும் என்பதற்காக குர்ஆன், ஹதீஸிலே பித்தலாட்டங்களை செய்து  எதையாவது உளறி கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அந்த வகையில், சூனியம் சம்பந்தமான குர்ஆனின் வசனங்களுக்கு சுய விளக்கங்கள் கொடுத்து, ஹதீஸ்களை நிராகரித்து, ஹதீஸ் நிராகரிப்பில் உச்சத்தை அடைந்து இதுவரை யாரும் செய்யாத இனிமேல் யாரும் செய்ய துணியாத  …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 4 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – ஜகாத் திருடர்கள்

– அன்வர்தீன், பெரம்பலூர் ஜகாத்தை வருடா வருடம் கொடுக்காமல் ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்கு போய்ச்சேரவேண்டிய அமானிதமான ஜகாத் தொகையை அபகரித்து வைத்துள்ளபடியால், NTF, TNTJ கூட்டத்தினரை ஜகாத் திருடர்கள் என்று அழைப்பதில் எந்த தவறோ, தயக்கமோ இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு மேலே செல்லுங்கள். இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைகளில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 1400 வருடங்களுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 3 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் தொடர்ச்சி..

– அன்வர்தீன், பெரம்பலூர் ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். “இந்த மண்ணறையில் அடங்கப்பட்டுள்ள இறைத் தூதரின் வார்தையைத் தவிர, அனைவரின் வார்த்தைகளிலும் சரி, பிழை இரண்டும் உண்டு” என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். ஹதீஸ்கலை அறிஞர்கள், ஸஹீஹான ஹதீஸ்களை தரம் பிரித்து நினைவாற்றல், நம்பகமானவர், சங்கிலித்தொடர் அறுபடாமல் இருத்தல், ஸாத் மற்றும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம் இல்லாமல் …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 2 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல்

அன்வர்தீன், பெரம்பலூர் முஸ்லிம்களிடயே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே, இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள், கத்ரியாக்கள் (முஹ்தஸிலாக்கள்), ஷியாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற பல வழிகெட்ட கூட்டங்கள் தோன்றி மறைந்துள்ளன. உலகம் முடியும் வரை இதுபோன்று சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவர்களில் காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர்.  உதாரணமாக விபச்சாரம், திருட்டு போன்ற ஹதீஸ்கள் அவர்களின் படுத்தறிவுக்கு முரணாக தோன்றியதால் அதை நிராகரித்தார்கள். மேலும் காரிஜியாக்கள் …

Read More »

தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 1

அன்வர்தீன், பெரம்பலூர் 1980 களின் ஆரம்பத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் புறையோடிப்போயிருந்த அனாச்சாரங்களை ஒழிப்பதில் சகோதரர் பீஜே அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலட்சக்கணக்கான தமிழக முஸ்லிம்கள், முக்கியமாக இளைஞர்கள் அவர் சொல்லிவிட்டால் அதை வேதவாக்காக எடுத்து பின்பற்றும் அளவுக்கு அவர் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்தனர். இயக்கங்களுக்கு நிதி கேட்டாலே ஐந்தும் பத்தும் கொடுத்தது போய், லட்சக்கணக்கில் ஏன் கோடிகளில் கொட்டிக் கொடுக்க ஆரம்பித்தனர். இவரை இப்படியே …

Read More »

ஜகாத் விளக்க தொடர்கள் – ரமலான் 1441 – by அஷ்ஷைய்க் அப்பாஸ் அலி MISc

இஸ்லாம்கல்வி.காம் இணையதளம் வழங்கும் ஜகாத் விளக்கத் தொடர் – ரமலான் 1441 – Year 2020 வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISc ஜகாத்தின் முக்கியத்துவம் [ஜகாத் விளக்கத் தொடர் – 01] ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள் [ஜகாத் விளக்கத் தொடர் – 02] விற்பனை பொருட்கள், அணிகலன்கள் மற்றும் பயன்படுத்தும் பொருட்களுக்கு.. [ஜகாத் விளக்கத் தொடர் – 03] ஜகாத்தின் சிறப்புகள் [ஜகாத் விளக்கத் தொடர் – 04] …

Read More »

அறிஞர்களின் கருத்துக்கள் வஹியாகிவிடாது

இயக்க சார்பு முகாம் சிந்தனைகளின் தாக்கம் பெற்ற பல சகோதரர்கள் குறித்த சில அறிஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்படலாம். ஆனால் அதன் விட்டில்களாக அவர்கள் மாறுவதுதான் நவீன தக்லீத் ஆகும். ?நவீன சிந்தனைகளின் முன்னோடிகள் என்ற பெருமைக்குரியவர்களாக இலங்கையில் சில சகோதரர்களால் காட்டப்படுகின்ற ஷேக் முஹம்மது கஸ்ஸாலி (ரஹ்) ஷேக் யூசுஃப் கர்ளாவி போன்ற அறிஞர்களின் கருத்துக்களை குர்ஆன் ஹதீஸை ஆதாரம் காட்டுவது போன்று காட்டும் வழமை, ?சவூதி அறிஞர்கள் மற்றும் …

Read More »

அஸ்தி பற்றித் தீர்ப்பு வழங்கிய உலக அறிஞர்கள் சபைத் தலைவர்!? !?

தம்பிகளே… உஷார்! கொரோனா தொடங்கியதும் வீடுகளில் தொழுவது தொடர்பாக சவூதி அறிஞர்கள் சபை தூர நோக்கோடு எடுத்த மார்க்க ரீதியான, அதுவும் இஜ்திஹாத் தொடர்பான ஒரு முடிவை கேணத்தனமாக தென்னிந்தியாவில் இருந்து கொண்டு பரிகாசம் செய்தார், பீ.ஜே. அண்ணனின் இலங்கைத் தம்பிகளோ ஜம்மியத்துல் உலமாவின் நல்ல முடிவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக ஏதோ புலம்பினர். இறுதியில் ஞானம் பிறந்து, “முடியுமான அளவு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!” அரச சட்ட …

Read More »

தாஃவா எனும் சத்தியம் பிரச்சாரத்தின் இலக்கணத்தை விளங்காத சில தாயீக்களுக்கு ஓர் விளக்கம்!

வெற்றியாளர்களின் இலக்கணம்: 1) கல்வி கற்றல் 2) அமல் செய்தல் 3) சத்தியத்தை போதித்தல் 4) பொறுமை காத்தல் இந்த நான்கு நிபந்தனைகளை தான் பாக்கியவான்களின் பண்புகளாக இருக்க வேண்டும் என்று ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனில் கூறுகிறான்(சூரா அஸ்ர்). அல்லாஹ் கூறும் வரிசையும் முக்கியம். கல்வியை கற்று தான் அமல் செய்ய வேண்டும் பின்பு தான் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த வரிசையை மாற்றி செய்தாலும் முழுமையான பாக்கியவானாக முடியாது. …

Read More »